Skip to main content

நெல்லையப்பர் கோவில் தேர்களின் தனிச்சிறப்புகள்.!





    
     வணக்கம் அன்பு  நண்பர்களே.! தமிழகத்தின் முக்கிய நகரமான நெல்லை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஆம், நம் நெல்லையின்  பெருமைமிகு பத்து நாள் திருவிழாவான ஆனிப்பெருந்திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. இனி  தினந்தோறும் சுவாமி அம்மன் வீதி ஊர்வலம், கச்சேரி நடனம்  என்று  பத்து நாள்களுக்கு நெல்லையில் கொண்டாட்டம் தான். இதன் உச்ச நிகழ்வான தேரோட்டம் வரும் 14ம் தேதி நடக்கவுள்ளது. நாட்டில் ஓடும் மற்ற தேர்களுக்கு இல்லாத பெரும் சிறப்புகளெல்லாம் வரும் புதனன்று ஓடவிருக்கும்  நம் நெல்லையப்பர் தேர்களுக்கு  உண்டு...! அவைகள் என்னென்ன ...?
வாருங்கள்....! பார்ப்போம்..
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்:

நெல்லையப்பர் பேராலயம் 
     தமிழகத்தின் மிகப்பழமையான சிவாலயங்களில் மிகப்பெரியதாக விளங்கும் நெல்லையப்பர்  கோவிலில் ஆனி பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழாவின் பத்தாவது நாளன்று நடக்கும் தேரோட்டம் மிகப் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத, வேறுபாடுகள் கடந்து ஒற்றுமையோடு தேரிழுப்பர். குற்றால சாரலில் தென்பொதிகை தென்றலில் மிதமான வானிலையில் அசைந்தாடி வரும் அந்த தேரை காண கண் கோடி வேண்டும்.

அம்சமான ஐந்து தேர்கள்:
     
நெல்லையில் ஆனித்திருவிழாவின் போது ஐந்து தேர்கள் ரத வீதிகளை சுற்றி வரும். சுவாமி தேர்(நெல்லையப்பர்) , அம்பாள்  தேர் (காந்திமதி) , முருகன் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என்று ஐந்து தேர்கள் வலம்  வந்து வீதிகளை அழகுபடுத்தும். இந்த ஐந்து தேர்களில்  முக்கியமானது நெல்லையப்பர் தேராகும்.



நெல்லைப்பப்பர் தேர் 

இதன் சிறப்பம்சங்கள் :
1.  இது தமிழகத்தின் 3வது மிகப்பெரிய தேர் ஆகும்.

2.  சுமார் 400 டன்  எடை கொண்டது இத்தேர்.

3.  இதன் அச்சு லண்டனில் ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டது.

4.  முற்றிலும் மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தேர்.

5.  518 ஆண்டுகளாக தடையின்றி நடைபெறும் உலகின் பழமையான தேரோட்டம்.

6.  1505 ம் ஆண்டு முதல் நெல்லையில் தேரோட்டம் நடைபெறுகிறது.

7. சுதந்திரத்திற்கு பின்  வெள்ளையனை வெளியேற்றிய மகிழ்ச்சியில் தேசிய கோடியை தலையில் பறக்க விட்டபடி வலம் வந்த சுதந்திர தேர் , நம்  நெல்லையப்பர் தேர்.

      இத்தனை சிறப்புகளை  கொண்ட  தேரோட்டம் வரும் 14ம் தேதி நெல்லையில் நடக்கவிருக்கிறது. லட்சக்கணக்கான பக்க்தர்கள் நெல்லையில் கூடவிருக்கிறார்கள்..

என்ன நண்பரே... நீங்களும் நிச்சயம் வாருங்கள். நெல்லை அதிரட்டும்..! 

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...