Skip to main content

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?


பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது.

இனி நெல்லை தான் No.1.

இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம்.

திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு!

ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தென்காசியா சங்கரன்கோவிலா?

வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

தென்காசி:

*ஏற்கனவே தென்காசி நாடாளுமன்ற தொகுதியாக இருப்பதால் தென்காசி மாவட்டம் உருவாகவே வாய்ப்பு அதிகம்.

*மேலும் முக்கிய ரயில்வே,சாலை சந்திப்பாகவும் தென்காசி திகழ்கிறது.

*இப்போதே நெல்லையைப் போன்ற வட்டார போக்குவரத்து அலுவலகம் அங்கு செயல்படுகிறது.

*குற்றாலம் அருகிலிருப்பதால் தென்காசி தமிழகம் முழுவதும் பிரபலம்.

சங்கரன்கோவில்:

*நெல்லை மாவட்டத்தில் நெல்லைக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக இது இருக்கிறது.

*சங்கரன்கோவில் பல ஆண்டுகளாக அமைச்சர்களின் தொகுதியாக இருந்து வருகிறது.

*புதிய மாவட்டம் உருவானால், அம்மாவட்டத்தின் மையப்பகுதியாக சங்கரன் கோவிலே இருக்கும்.

நெல்லைக்கு என்ன இழப்பு.?

*புதிய மாவட்டம் உருவானால் நெல்லையின் முக்கியத்துவம் சற்றே குறையும்.

*உலகப்புகழ் பெற்ற குற்றால அருவியை நெல்லை மாவட்டம் இழக்கும். (எனினும் பாபநாசம், மாஞ்சோலை நெல்லையில் நீடிக்கும்)

*கேரள எல்லையை கொண்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இருந்து நெல்லை நீக்கப்படும்.

*அலுவல் ரீதியாக நெல்லைக்கு வரும் தென்காசி பகுதி மக்களின் எண்ணிக்கை குறையும்.

நெல்லையின் அடுத்த பிள்ளை:

பாரம்பரியமிக்க நம் நெல்லை மாவட்ட பகுதிகளைக் கொண்டு தான் ராமநாதபுரம்,விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.
அவை அனைத்தும் இன்று தனித்த வளர்ச்சியில் பயணித்து வருகின்றன.
அந்த வரிசையில் புதிய மாவட்டமும் இணைய வாய்ப்புள்ளது.

புதுப் புது பெயரில் மதுரைக்கு தெற்கே எத்தனை மாவட்டங்கள் உருவானாலும் தென் பாண்டி நாடு என்ற நமது பூர்வீகப் பெயரில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என்பதே உண்மை.!

Comments

Popular posts from this blog

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...