Skip to main content

நதிக்கு நடுவில் ஓர் அசால்ட் ஆறுமுகன்.



தமிழ்க் கடவுள் முருகன் ஒரு திரில்லிங் பிரியர். ஆம், நண்பர்களே பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அப்படி..!

குன்றின் மேல் குமரன்:

நம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மலை உச்சியில் நின்று கொண்டு தான் அருள்பாலிக்கிறார் முருகன். அப்படி அருள்பாலிப்பதனாலேயே நம் அழகனுக்கு "குன்றின் மேலிருக்கும் குமரன்" என பெயர்சூட்டினர் நம் முன்னோர்கள். அதேப் போல திருச்செந்தூரில் ஆர்ப்பரிக்கும் ஆழி அருகே கோவில் கொண்டு காட்சியளிக்கிறார் சண்முகர்.

நெல்லையில் திகில் சாகசம்:

ஆனால் நம் நெல்லையில் இன்னும் ஒருபடி மேலே போய் பாய்ந்தோடும் தாமிரபரணிக்கு நடுவே அசால்ட்டாக அமர்ந்திருக்கிறார் ஆறுமுகன். உலகில் உள்ள கடவுள் சிலைகளுக்கு ஆற்று நீர் கொண்டு அபிஷேகம் நடைபெறும் நிலையில், ஆறே வந்து வருடந்தோறும் முருகனுக்கு அபிஷேகம் செய்கிறதென்றால் அது நம் நெல்லையில் மட்டும் தான் நடக்கும்.



வியக்க வைக்கும் விஞ்ஞானம்:

காலங்காலமாக வருடந்தோறும் பெருக்கெடுக்கும் தாமிரபரணியின் சீற்றத்தை இந்த முருகன் கோவில் எப்படி தாக்குபிடிக்கிறது என்று பார்க்கும் போது, நம் முன்னோர்களின் நுட்பமான விஞ்ஞானம் நம்மை வாய்ப்பிளக்க வைக்கிறது.

நதியின் குறுக்கே நகராத படகு:

குறுக்குத்துறை முருகன் கோவிலின் கட்டுமானம் படகு வடிவில் அமைந்துள்ளது. அதாவது ஆற்றை எதிர்த்து கூம்பு வடிவத்தில் நீண்டிருக்கிறது கோவில். இதனால் பாய்ந்து வரும் நதி நீர் இரண்டாக கிழிந்து இருபுறமும் பிரிந்து விடுகிறது. இதனால் எந்த வேகத்தில் வெள்ளம் வந்தாலும் கோவிலுக்கு எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை.
1992 வெள்ளத்தின் போது கோவிலுக்கு மேல் தண்ணீர் சென்ற போதும் சில ஓடுகள் தான் காணாமல் போனதாம்.!😜

திருச்செந்தூரின் தாய்க் கோவில்:

குறுக்குத்துறையின் மற்ற பெருமைகள் நம்மை இன்னும் ஆச்சர்யப்பட வைக்கிறது.


1. திருச்செந்தூர் கோவிலில் இருக்கும் முருகனின் மூலவர் சிலை குறுக்குத்துறை பாறைகளில் இருந்து  தான் வெட்டி செதுக்கப்பட்டுள்ளது.

2. வெள்ளையர்களால் கடலில் தூக்கி வீசப்பட்ட திருச்செந்தூர் செப்பு முருகன் சிலைக்கு பதிலாக புதிய சிலை ஒன்றை செய்துள்ளனர். ஆனால் அந்த சிலை மீண்டும் கிடைத்துவிட்டதால், புதிதாக செய்யப்பட்ட சிலையை நம் குறுக்குத்துறைக்கு கொண்டு வந்து நிறுவியுள்ளார்கள்.

இதனால் நம் நெல்லை குறுக்குத்துறை திருச்செந்தூரின் தாய்க் கோவிலாக அழைக்கப்படுகிறது.

அதிசயம்,அற்புதம்:

இப்படி பல பெருமைகளை தாங்கி நிற்கும் இந்த முருகன் கோவில் நம் பொருனையின் ஆர்ப்பரிப்பையும் தாங்கி நிற்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...