Skip to main content

நீங்கா நினைவுகளான நெல்லை நிகழ்வுகள் - 2017



 நெல்லை - 2017.

 
 
     பரபரப்பான நிகழ்வுகளுக்கு நம்ம  திருநெல்வேலியில் என்றுமே பஞ்சம் இருக்காது . விரைவில் விடைபெறவுள்ள 2017ம் ஆண்டிலும் நம் திருநெல்வேலி பல நேரங்களில் தலைப்புச் செய்தியானது. அதில் மிக முக்கியமான ஐந்து நிகழ்வுகளை வரிசைப்படுத்தி உங்களுக்காக கீழே அளித்துள்ளோம்.
 

5. இந்திய அணியில் இடம்பெற்ற ஓர் நெல்லையன்.

திரு. விஜய் சங்கர் 

     உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியான இந்திய அணியில் நம் நெல்லையை சேர்ந்த விஜய் சங்கர் இந்தாண்டு  இடம்பிடித்து பிறந்த நெல்லை மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.
 

4. பேய் மழையைப் பெற்ற நெல்லை மாவட்டம்.
பொங்கி பாயும் தாமிரபரணி 

 
 
     இந்தாண்டு நம் நெல்லை மாவட்டம் வரலாறு காணாத மழையை பெற்றது. குமரிக் கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல், நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பெரு மேகவெடிப்புகளை நிகழ்த்தியது. திருநெல்வேலி மாவட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 45 செ.மீ மழை ஒரே நாளில் பாபநாசத்தில் கொட்டித் தீர்த்தது.இதைத் தொடர்ந்து, தாமிரபரணியும் பெருக்கெடுத்தது.
 

3. ஜல்லிக்கட்டுக்காக களம் கண்ட நெல்லை.
ஜல்லிக்கட்டு போராட்டம் 

    
     நம் தமிழர்களின் பண்பாட்டு பொக்கிஷமான ஜல்லிக்கட்டை சூழ்ச்சிகளில் இருந்து விடுவிக்க உலகெங்கிலும் போராட்டங்கள் நடந்தது. சிங்காரச் சென்னையில் நடந்த மெரினாப் புரட்சி டெல்லியை அலற வைத்தது. அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில், நம் நெல்லை இளைஞர்கள் பாளை வ.உ.சியில் திரண்டு வீர விளையாட்டை மீட்க வீரமுழக்கமிட்டு வரலாறு படைத்தனர்.
 

2. இரு விருதுகளையும் தட்டிச் சென்ற நெல்லை.


நெல்லை மாநகராட்சி அலுவலகம் 

     2017 ம் ஆண்டு நெல்லை மாநகராட்சிக்கு மறக்க முடியாத ஆண்டு. ஏனெனில், சிறந்த மாநகராட்சிக்கான விருதை ஒரே ஆண்டில் மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் நம் நெல்லை பெற்றது. புதன் கிழமை தோறும் பிலாஸ்டிக் கழிவுகளை பெறும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மத்திய,மாநில அரசுகள் சேர்ந்து நம் நெல்லையை கவுரவித்தன.
 

1. இந்தியாவையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை.

கொழுந்துவிட்டு எரியும் உயிர்கள் 
 
    
      கந்துவட்டிக் கொடுமை தாளாமல் ஒரு குடும்பமே நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுமைக்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது. மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் குறித்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்க இக் கொடூர நிகழ்வு வழிவகுத்தது. நெல்லை வரலாற்றில் நீங்கா வடுவாகவும் இந்நிகழ்வு இடம் பெற்றது.


Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

பிளக்கிறது நெல்லை.பிறக்கிறது தென்காசி.!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் திருநெல்வேலியை இரண்டாக பிரிக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கிவிட்டது. தென்காசி நகரை தலைமையாக கொண்டு புதிய மாவட்டமொன்று மலரவுள்ளது. சிதறும் நெல்லை ஆங்கிலேயர் ஆட்சியில் பரந்து வரிந்த மாவட்டமாக இருந்த திருநெல்வேலி அடுத்து வந்த ஆட்சியாளர்களால் ராமநாதபுரம்,விருதுநகர்,தூத்துக்குடி என துண்டாடப்பட்டது. தற்போது அதுமேலும் பிளவுபட காத்திருக்கிறது. மக்கள் விருப்பம் என்ன? நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க அரசு முயன்று வருவதை நம் மக்கள் பலரும் விரும்பவில்லை. எனினும் தென்காசி சுற்றுவட்டார பகுதி மக்களின் கருத்து வேறு வகையில் உள்ளது. தங்கள் ஊர் மாவட்ட தலைநகரமாக மாறுவதை அவர்கள் விரும்புகிறார்கள். நெல்லைக்கு பேரிழப்பு: தென்காசி தனிமாவட்டமாக பிரிந்தால் நெல்லைக்கு அது பெரும் இழப்பாகும். • குற்றாலம் இனி நெல்லை மாவட்டத்தில் இருக்காது. • ‎செங்கோட்டை பார்டரை இழப்போம். • ‎செழிப்புமிக்க பல விவசாய ஊர்கள் அங்கே சென்றுவிடும். • ‎அழகிய அணைக்கட்டுகள் பல அம்மாவட்டத்தோடு இணையும். • ‎மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி நம்மிடம் இருக்காது. • ‎பாபநாசம்,மாஞ்சோலை...