Skip to main content

ராகுல் எழுச்சியால் மோடி வீழ்கிறாரா?



ராகுல் எழுச்சியால் மோடி வீழ்கிறாரா?



நாடே எதிர்ப்பார்த்த குஜராத் தேர்தல்   முடிவுகள் வெளிவந்து விட்டன. பிரதமர் மோடிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் நடந்த உச்சகட்ட மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது.  பா.ஜ. கட்சியின் கோட்டை எனக் கருதப்படும் குஜராத்தை எப்படியாவது தன் வசம் கொண்டு வந்துவிட முயன்ற காங்கிரசுக்கு மகிழத்தக்க தோல்வி (77) கிடைத்திருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்புகளை கடந்து அங்கு ஆட்சியமைத்து விட்டது (99).

பா.ஜ.கவுக்கு ஆச்சரியமளிக்கும் முடிவுகள்.

     ஆட்சியமைத்து  விட்டோம் எனக் கருதும் பா.ஜ.க தனது கிராமப்புற வாக்காளர்களை இத்தேர்தலில் இழந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், மோடியின் பிறந்த மண்ணிலேயே அக்கட்சி தோல்வி கண்டுள்ளது. மாதக்கணக்கில் அங்கு முகாமிட்டு மோடி பிரச்சாரம் செய்தாலும், பா.ஜ.கவின் இந்த சறுக்கல் அக்கட்சியினரை கவலை கொள்ள வைத்துள்ளது.

காங்கிரசின் "கை" ஓங்குகிறது.

     ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி காலரை தூக்கிக் கொண்டாடும் நிலையில் இருக்கிறது. பட்டேல்,பிற்படுத்தப்பட்டோர்,தலித் சமூகங்களை இணைத்து கூட்டணியை உருவாக்கிய ராகுலின் வியூகம் வெற்றி பெற்றுள்ளது. வெறும் 7.5 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அங்கு ஆட்சியை அக்கட்சி இழந்துள்ளது. இது காங்கிரஸ் செல்வாக்கை குஜராத்தில் உயர்த்தியுள்ளது.

மோடியா? ராகுலா?

     மோடிக்கும் ராகுலுக்கும் நேரடிப் போட்டியாகவே இத்தேர்தல் பார்க்கப்பட்டது. குஜராத்தை முன்னிருத்தியே வளர்ந்த மோடியின் செல்வாக்கை காங்கிரஸ் தலைவரான பிறகு ராகுல் அசைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த வெற்றி காங்கிரஸ் காரர்களுக்கு புத்துணர்வை அளித்திருக்கிறது.  தேசிய அளவில் மோடிக்கு மாற்றாக ஒரு ஆளுமையை பெற்று விட்டதாக அவர்கள் மகிழுகிறார்கள். ஆனால், ராகுலின் இந்த எழுச்சி மோடியை வீழ்த்தும் அளவிற்கு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. எனெனில் குஜராத்தில் முன்னேறியுள்ள காங்கிரஸ் கட்சி ஹிமாச்சலில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. எனவே, பா.ஜ.வை வீழ்த்தும் வலிமை காங்கிரசுக்கு இன்னும் வரவில்லை என்பதே உண்மை. ஆனால், ராகுலின் கடுமையான உழைப்பு இப்போது போலவே தொடர்ந்தால், "ராகுலால் வீழ்ந்தார் மோடி" என்று ஒரு நாள் ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிடும்!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...