Skip to main content

நியாபகம் வருதே நியாபகம் வருதே...!

                                        
                

                         அழகிய ஆற்றுப் பாலக் காட்சிகள் 
 
            ஒரு வாரத்துல மொத்தம் ஏழு நாட்கள். அது தான் எல்லாத்துக்கும் தெரியுமே.? ஆமா, அந்த ஏழு நாட்கள்ள ஐஞ்சு நாள் தான் எனக்கு காலேஜ் இருந்துச்சு....காலேஜ் இருந்ததது நம்ம பாளையங்கோட்டையில தான். அதாவது ஜங்சன்ல இருந்து சரியா 3 கி.மீ. எல்லாத்தைப் போல நானும் பஸ்லப் போற ஆள் தான். அதுவும் வேணி பஸ்ஸா பார்த்து ஏர்றது வழக்கம்.
மூஉனு கி.மீ!! பயணங்கறதுனால சீட்டு இருந்தாதா ஏற்ரது. ஏற்ன உடனே பின் வாசலுக்கு நேரெதிர் சீட்ட புடிச்சாச்சுனா ஒரு நிம்மதி.
 
பயணம் ஆரம்பம்.
 
     வண்டி சங்சன (ஜங்சனை) தாண்டி தேவர் சிலைக்கு வந்துரும். சில நேரம் சிக்னல்ல சிக்கி 20 செகண்ட் நிக்குறது வாடிக்கை. அத தாண்டி ஒரு வழியா மீண்டு வந்ததும் அழகான ஆத்துப்பாலம் கண்ணுக்கு தெரியும்.
சுலோச்சனா முதலியாருன்னு அதுக்கு பேர் விட்ருக்காங்க, அத கட்டுனவரும் அவரு தான்.
 
பாலத்தின் மீது பயணம்.
 
பஸ் அந்த பாலத்துல போய்க்கிட்டிருக்கும் போது உண்மைலயே பெருமையா பிரம்பிப்பா இருக்கும். என்னா அத கட்டி 175 வருஷம் ஆகுது. அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கும் நெல்லையையும் பாளையங்கோட்டையையும் விடாம புடிச்சு வச்சிருக்கு. பாலத்தில இருந்து பார்த்தா கலெக்ட்டர் ஆபிஸ்ல தேசிய கொடி பொதிகை காத்துல மாசா பறக்குறது தெரியும். கொஞ்சம் பார்வைய திருப்பினா போதும் பூமியோட சொர்க்கம் தெரியும். அட ,நம்ம திருநெல்வேலி ஆத்தங்கரையத்தான் அப்டி சொல்றேன்.
                       அதுக்கு நடுவுல தாமிரபரணி தவழ்ந்து வரும் அழகே தனி.!
 


தைப்பூச மண்டபம்.

    



தாமிரபரணிக்கு அடுத்து கண்ணுல படுறது தைப்பூச மண்டபம். ஆத்தங்கரையில இருக்குற அந்த மண்டபமும் நெல்லையப்பர் கோவிலும் ஒரே நேர்க் கோட்டுல இருக்குதாம். அடுத்து அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்க கல் மண்டபங்கள் கூடுதல் அழகு.
 
ஆத்தங்கரையின் வரலாறு 
 
     திருநெல்வேலி ஆத்தங்கரைக்கும் வரலாறு இல்லாம இல்ல.! கூத்து, நாடகங்கள்னு தொடங்கி இந்திய சுதந்திர போராட்டம் வரைக்கும் எல்லாம் இந்த கரைல தான் நடந்துருக்கு. வ.உ.சி, பாரதி, சிவா ன்னு பல வீரர்களோட வீர முழக்கங்கள் இன்னும் அங்க எதிரொலிச்சுகிட்டு தான் இருக்கு.

குறுக்குத்துறை காட்சிகள் 

     தூரத்துல தெரியுற கருப்பந்துறை ரயில்வே பாலத்த சொல்லியே ஆகணும். ஏன்னா அந்த பாலம் ரெண்டு மாநிலத்தையே பிரிக்குற இடம்.ஆமாங்க, பாலத்துக்கு இந்த பக்கம் மதுரை ரயில்வே கோட்டம் அந்த பக்கம் திருவந்திரம் ரயில்வே கோட்டம்.

உத்து பாத்தா குறுக்குத்துறை முருகங்கோயில் தெரியும். ஆனா தெக்க இருந்து வர்ற ரயிலுங்க அடிக்கடி அந்த காட்சிய கலைச்சிடும். அப்போ தூரத்துல இருந்த பொதிகை மலையும் அந்த காட்சியோட சேர்ந்துடும்.

அதாவது,

நீல நிற மலை,
நீல நிற ரயில்,
நீல நிற தாமிரபரணி..!
இதான் அந்த காட்சி.

எறங்குறவங்க வாங்க..!

     இந்த இயற்கை தரிசனத்துக்கு பிறகு, "கொக்கிரகுளம் கலெக்டர் ஆபீஸ் வந்துட்டு இறங்குறவுங்க வாங்க" ன்னு கண்டெக்டர் அண்ணன் கூப்பிடுவாரு.
நம்மளும் இறங்கி போயி பாலத்துக்கு மேல நின்னு அந்த காட்சிகளை திரும்பத் திரும்ப பாக்கனும்னு தோணும்.

ஆனா, காலேஜிக்கு லேட்டாயிருங்குறதுனால இறங்குறது கிடையாது.
                                              
                                            அது ஒரு அழகிய நிலா காலம்..!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...