Skip to main content

ஆட்சியை கலைப்பாரா ஆளுநர் ...?

     
தமிழக ஆளுநர் (பொறுப்பு)



தமிழக அரசியல் களம் : 

    எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத  அரசியல் களம் நம் தமிழகத்தினுடையது. ஆனால் தற்போது அது கக்கும் அனல் ஒட்டு மொத்த இந்தியாவையும் வாட்டி வதைக்கிறது . ஆம் நண்பர்களே, இந்திய அரசியல் விரும்பி களின் ஒட்டு மொத்த கவனமும் நம் தமிழக அரசு கவிழுமா? கலையுமா? அல்லது தொடருமா? என்பதை நோக்கியே இருக்கிறது.



வீடியோ விவகாரம் :

     ஓட்டெடுப்பை ஒட்டி நடந்ததாக சொல்லப்படும் குதிரை பேர வீடியோ சமீபத்தில் பிரபல தொலைக்காகாட்சி ஒன்றில் வெளியாகி அதிமுக இரு அணிகளையும் கலக்கமடைய வைத்திருக்கிறது.  இதில் சம்பந்தப்ப்பட்ட எம்.எல்.ஏ புகாரை மறுத்தாலும் எதிர்க்கட்சிகள் அதை விடுவதாக இல்லை.



கெத்து காட்டும் திமுக:
       இந்த வாய்ப்பை மற்ற கட்சிகளைக் காட்டிலும் முறையாக பயன்படுத்துவது தி.மு.க தான். சி.பி.ஐ. விசாரனை கோரி ஹைகோர்ட்டில் முறையிட்டது , சட்டசபையில் வெளிநடப்பு செய்தது என்று மக்கள் பார்வையை தன் பக்கம் திருப்ப முயல்கிறார் ஸ்டாலின் . அதை தாண்டிய நடவடிக்கையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்கவும் கோரியிருக்கிறார் அவர்.

ஆளுநரின் அதிரடி :
      ஸ்டாலினின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டிருப்பது இன்னும் பரபரப்பை கூட்டியிருக்கிறது. இதனிடையே உயர் நீதிமன்றமும் கிடுக்கிப்பிடி விசாரனையை துவங்கியிருக்கிறது. இந்நிகழ்வுகள் எடப்பாடி அரசுக்கு நெருக்குதலை உண்டாக்கியுள்ளது. இதுவே மக்கள் மத்தியில் ஆட்சியின் ஆயுசு பற்றி பேச வைத்துள்ளது.

என்ன நடக்கும் இனி ....?
    ஆளுநர் விசாரனைக்கு உத்தரவிட்டிருப்பது சம்பிரதாயமானது தான் என்றாலும், அதன் முடிவை தீர்மானிப்பதில் டெல்லியின் பங்கு இருக்கக் கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 இதற்கிடையே உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட்டால் நிலைமை கைமீறி சென்று விடும் என்பதால் ஆளுங்கட்சியினர் உட்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனர். 
     ஆனால் இதெல்லாம் நடந்து, அதன் பிறகு தான் ஆட்சியின் மீது ஆளுநர் வைக்க முடியும். அதற்கு முன் அவரை ஸ்டாலினில்லை மோடியே சந்தித்தாதாலும் தமிழக எடப்பாடி அரசுக்கு பாதகமில்லை. 
       இருந்தாலும், நொடிக்கு நொடி மாறும் அரசியல் வானிலையால் என்ன வேண்டுமானாலும் நிகழும் என்பதே இன்றைய யதார்த்த நிலை.....!

     


Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...