Skip to main content

நெல்லை சர்வதேச விமான நிலையம் - சாத்தியமா.?



பெருமைமிகு நெல்லை மாநகரம்: 

சுதந்திரத்திற்கு முந்தைய சென்னை ராஜதானியில் அதிக நகரங்களை கொண்டிருந்த ஜில்லா என்ற பெருமை நம் திருநெல்வேலி ஜில்லாவிற்கு இருந்தது. நம் நெல்லை அடிப்படையில் இரட்டை நகரம் அல்ல. முப்பெரும் நகரம்.! ஆம், திருநெல்வேலி,பாளையங்கோட்டை,மேலப்பாளையம் என மூன்று நகரங்களை உள்ளடக்கியது தான் திருநெல்வேலி மாநகரம். 

சிறப்பான உட்கட்டமைப்பு: 

தமிழகத்தில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும் நகரங்களுள் நெல்லை முக்கியமானது. தமிழகத்திலேயே மிகக் குறைந்த மக்கள் நெருக்கடியைக் கொண்ட மிகப் பெரிய நகரமாக இருப்பது நெல்லை மாநகரம். பரப்பளவில் சென்னை,கோவை,மதுரைக்கு அடுத்து மிகவும் பரந்து விரிந்த நகரமாக இருப்பது நெல்லை மாநகரம். 

முக்கிய சந்திப்பு: 

தமிழ்நாட்டில் மதுரைக்கு தெற்கே மிகப்பெரிய போக்குவரத்து சந்திப்பாக நம் திருநெல்வேலி இருக்கிறது. ரயில், சாலை என இரண்டு வழிகளிலும் மிகப் பெரிய சந்திப்பாக இருப்பது நம் திருநெல்வேலி. பொதிகை மலையில் இருந்து இருபிரிவாக பிரிந்து வரும் தாமிரபரணி, திருநெல்வேலிக்கு அருகிலிருக்கும் சீவலப்பேரியில் தான் ஒன்றாக இணைந்து பெருநதியாக விரிகிறது. 

விமான நிலையம் - நீண்ட நாள் ஏக்கம்.! 

இப்படி, ரயில், சாலை வழிகளில் தென்தமிழகத்தின் மிக முக்கிய சந்திப்பாக இருக்கும் திருநெல்வேலியில் சர்வதேச விமான நிலையம் ஒன்று இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. இதனால், பெரும் கனவோடு தொடங்கப்பட்ட கங்கைகொண்டான், நாங்குநேரி பெருந்தொழில் வளாகங்கள் முன்னேறாமல் மூச்சுவாங்கி நிற்கின்றன. நம் தூத்துக்குடியில் விமான நிலையம் அமைந்திருந்தாலும் அது தென்தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கவில்லை. மேலும் அது உள்நாட்டு விமான நிலையமாகவே செயல்பட்டு வருகிறது. எனவே தென்தமிழகத்தின் மையப்பகுதியான நெல்லையில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைப்பது அவசியத் தேவையாக மாறியிருக்கிறது. 

எங்கு அமைக்கலாம்: 

நெல்லை மாவட்டத்தில் நெல்லை-நாகர்கோவில் வழித்தடம் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஏற்ற பகுதியாக இருக்குமென கூறப்படுகிறது. சர்வதேச சுற  விமான நிலையத்தால் விளையும் பயன்கள்: 

1. தொழில் நகரங்களான கோவில்பட்டி, கங்கைகொண்டான்,  நாங்குநேரி,மகேந்திரகிரி இஸ்ரோ, ஐஎன்எஸ் கட்டபொம்மன் மற்றும் விரைவில் வரவுள்ள குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு மையமான பகுதியாக நம் நெல்லை இருப்பதால் இங்கு சர்வதேச விமான நிலையம் அமைவது இந்த அமைப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். 

2. நெல்லையில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால், தென்தமிழகத்தின் சர்வதேச வான்வழி நுழைவு வாயிலாக நம் நெல்லை மாநகரம் உருமாறும். 

3. கங்கைகொண்டான், நாங்குநேரி பெருந்தொழில் மண்டலங்கள் வேகமான முறையில் வளர வாய்ப்பு ஏற்படும். 

4. தென் தமிழகத்தின் மையமான நெல்லையில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால் நெல்லை,தூத்துக்குடி,குமரி,தென்காசி,விருதுநகர் மாவட்ட மக்கள் மதுரைக்கோ, திருவனந்தபுரத்திற்கோ செல்லும் நிலை தவிர்க்கப்படும். 

5. சர்வதேச விமான நிலையத்தால் நெல்லை உலக முக்கியத்துவம் பெறும் என்பதால் தொழில் முதலீடும் அதிகரிக்க வழி ஏற்படும். 

6. உலக சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரியில் விமான நிலையம் இல்லாத நிலையில் அம்மாவட்டத்தின் தேவையையும் நெல்லை விமான நிலையம் தீர்த்து வைக்கும்.

அமைவது நன்மை: 

ஐந்திணையும் கொண்ட ஒரே மாவட்டம், வற்றாத நதியை கொண்ட ஒரே மாவட்டம், தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான வணிக நகரம் என்ற பெருமையை கொண்ட நெல்லையில் சர்வதேச விமான நிலையம் அமைவது காலத்தின் தேவையாகவே பார்க்கப்படுகிறது. மேலும், நெல்லையை மையமாக கொண்ட தென் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் சர்வதேச வானூர்தி நிலையம் மிகவும் முக்கியமானது என்பதே உண்மை.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...