Skip to main content

தமிழர்களின் தொல்லியல் பூமியாக மாறும் திருநெல்வேலி.!


தமிழ் பிறந்த மாவட்டம் என்ற சிறப்பை கொண்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் இப்போது தமிழர்கள் தோன்றிய மாவட்டம் என்ற பெருமையை அறிவியல் பூர்வமாக பெற்றிருக்கிறது. திருநெல்வேலியில் தோன்றும் நதிகள் இந்த பெருமையை நெல்லைக்கு பெற்றுத் தந்துள்ளன. 

முதலில் தாமிபரணி: இப்போது நம்பியாறு

இந்தியாவிலேயே முதன்முதலில் அகழாய்வு நடந்த நதிக்கரை என்ற பெருஞ்சிறப்பு பொருநை நதிக்கு உண்டு. நெல்லையில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூரில் அந்த அகழாய்வு முதல்முறையாக நடந்தது. தற்போது, அது கொற்கை, சிவகளை என பிரம்மாண்டமான முறையில் விரிவடைந்துள்ளது. அதன் அடுத்த கட்டமாக தாமிரபரணியின் கிளை நதியான நம்பியாறு அகழாய்வாளர்களின் அடுத்த களமாக உருவெடுத்துள்ளது.

துலுக்கர்பட்டி எனும் தொல்லியல் பொக்கிசம்:

திருநெல்வேலி மாநகரின் தென் பகுதியில் இந்த தளம் அமைந்திருக்கிறது. வள்ளியூருக்கு தென்கிழக்கில் 6 கி.மீ தொலைவில் இருக்கும் துலுக்கர்பட்டி தமிழ்நாட்டின் கடைக்கோடி தொல்லியல் தளமாக அகழாய்வு செய்யப்படவுள்ளது. இந்த இடத்தில் குறியீடுகள் கொண்ட கருப்பு சிவப்பு மண் ஓடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இது பழம்பெரும் காலமாக கருதப்படும் இரும்பு மற்றும் தொடக்க வரலாற்று காலத்தை சோ்ந்தவை என அரசு அறிவித்துள்ளது. மேலும் இது ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகியவற்றுக்கு சமகாலத்தில் இருந்த ஊராகும். எனவே, இதன் முடிவுகள் இன்னும் பெரிய அளவில் தாக்கத்தை செலுத்த இ்ருக்கிறது. 

தொல்லியல் பூமி திருநெல்வேலி:

ஆதிச்சநல்லூர், சிவகளை தொல்லியல் ஆய்வுகளின் மூலம் திருநெல்வேலி தமிழ்நாட்டின் மிகப் பழமையான நாகரிக மாவட்டம் என்ற பெருமையை உலக அரங்கில் பறைசாற்றியது. தற்போது பொருநையின் கிளை நதியில் நடக்க இருக்கும் துலுக்கர்பட்டி அகழாய்வின் முடிவுகள் இந்தியாவின் மனித குல வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.! மேலும் இது இந்தியாவின் பூர்வீக இனமான தமிழினத்தின் பிறப்பிடம் திருநெல்வேலி மண் தான் என்பதையும் நிறுவி நிற்கும்.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...