Skip to main content

எந்த மழைக்கும் அசராத திருநெல்வேலி.!

இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த செய்தி பல்வேறு மாவட்ட மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.  ஏனெனில், அந்தளவுக்கு மக்களை பயமுறுத்தி வைத்துள்ளது வடகிழக்கு பருவமழை.

ஆனால் வடகிழக்கு பருவமழையின் சர்க்கார் நம் நெல்லையில் எப்போதுமே எடுபடுவதில்லை. அதற்கு காரணம் நம் தாமிரபரணி நதியும் அதன் அணைகளும் தான்.!

நதியின் விஸ்வரூபம்!

பொதிகை மலையில் ஆண்டு தோறும் மழைப் பொழிவு இருப்பதால் வற்றாத ஜீவநதியாக பாய்கிறது நமது தாமிரபரணி நதி. ஆனால், மழைக் காலங்களில் அதன் ஓட்டம் பெரும் ஆரவாரமாய் இருக்கும்.  மலையிலுள்ள மண்ணையும் மரங்களையும் வாரி சுருட்டிக் கொண்டு சமவெளியில் பாய்ந்து ஓடும்.  எனினும் அதனால் எந்த விதமான பெரும் பாதிப்பும் நம் மக்களுக்கு ஏற்ப்படுவதில்லை.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பது நம் நதியை நாம் பாதுகாக்கும் முறை தான்.

ஆற்றுக்கு அப்பால் தான் ஊர்கள்:

பாபநாசத்தில் தொடங்கி புன்னைக்காயல் வரை ஆற்றுக்கு மிக மிக அருகில் எந்த ஊரும் இருப்பதில்லை. விதிவிலக்கு நம் நெல்லை மாநகரம். இதற்கு முக்கிய காரணம் வெள்ளத்தின் போது ஆறு எடுக்கும் விஸ்வரூபம் தான்! எனவே அதற்கு பயந்தே நமது ஊர்கள் ஆற்றில் இருந்து தொலைவான பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அரண் போன்ற அணைகள்:

அடுத்த காரணம் நம் தாமிரபணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள்... கிட்டத்தட்ட பதினோறு அணைகள் தாமிரபரணியை தடுத்து நிறுத்த கட்டப்பட்டுள்ளன. இது வெள்ளத்தில் இருந்து மட்டுமல்ல வறட்சியிலிருந்தும் நம்மை காத்து வருகின்றன.

வேகத்தடையாய் தடுப்பணைகள்:

அதற்கு அடுத்து தடுப்பணைகள், மொத்தமாக எட்டு தடுப்பணைகள் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. இவை மன்னர்களின் ஆட்சி காலத்தில் மிகவும் நுணுக்கமான வடிவமைப்புகளோடு கட்டப்பட்டவை. இத்தனை ஆண்டுகளாக பல கடும் வெள்ளப் பெருக்குகளை அடக்கி ஆண்டு இன்னும் கம்பீரமாக நிற்கின்றன.

இவையனைத்தும் தான் நம் திருநெல்வேலியை எத்தகைய புயல் மழை சுழன்றடித்தாலும் காப்பாற்றி வருகின்றன.
இதனால் இயற்கையும் அடங்கிப்போகிறது நம்மிடம்.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...