சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை போல இராஜபாளையம்-செங்கோட்டை இடையே புதிய நான்கு வழிச்சாலையை போட அரசு முடிவெடுத்துள்ளது.
ரம்மியமான மலையடிவாரச் சாலை.!
தமிழகத்தின் அழகான சாலைகளுள் மதுரை-செங்கோட்டை சாலையும் ஒன்று. விருதுநகர்,நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த சாலை அமைந்துள்ளது.
ரம்மியமான மலையடிவாரச் சாலை.!
தமிழகத்தின் அழகான சாலைகளுள் மதுரை-செங்கோட்டை சாலையும் ஒன்று. விருதுநகர்,நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த சாலை அமைந்துள்ளது.
எழுமிச்சை,கரும்பு,நெல் என சகலமும் செழித்து வளரும் நிலங்கள் நடுவே இச்சாலை செல்கிறது. இந்த சாலையில் தான் இரு மாவட்டங்களின் முக்கிய நகராட்சிகள் அமைந்துள்ளன.
விருதுநகர்:
*ஸ்ரீவில்லிபுத்தூர்.
*ராஜயாளையம்.
நெல்லை:
*புளியங்குடி
*சங்கரன்கோவில் (பைபாஸ்)
*கடையநல்லூர்
*தென்காசி
*செங்கோட்டை
இந்த நகரங்களை வடக்கு மாவட்டங்களோடு இணைப்பது இச்சாலை தான். ஆண்டு தோறும் குற்றாலம் சீசன் நேரத்திலும், சபரிமலை சீசனிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையில் பயணிக்கும். இதனால் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக்க அரசு முடிவெடுத்துள்ளது.
பாதையே மாறுகிறது:
புதிதாக வரவுள்ள இந்த நான்கு வழிச்சாலை ஏற்கனவே இருக்கும் பாதையில் இருந்து விலகி அமையவுள்ளது. அதாவது சிவகிரி,வாசு,புளியங்குடி முதலிய ஊர்களுக்குள் செல்லாமல் மேற்கு பகுதியில் அமையவுள்ளது.
பாதிக்கும் பயிர்த்தொழில்:
ஏற்கனவே இருக்கும் பாதையில் இருந்து விலகி புதிய பாதையில் நிறைவேற்றப்பட்டவுள்ள இந்த சாலையால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்படுகிறது. காலங்காலமாக விவசாயம் செய்து வந்த கிணறுகளையும் நிலங்களையும் இழந்து விடுமோ என்று இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் சாலையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால் மேற்கு தொடர்ச்சிமலையின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகுமோ என சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.
மாற்றுவழி உண்டா.?
இந்தச்சாலையை விவசாய நிலங்களுக்குள் செல்லாதவாறும் அமைக்கலாம் என்று அப்பகுதி மக்கள் யோசனை சொல்கிறார்கள். இதனால் 8 கி.மீ குறையவும் வாய்ப்புள்ளதாம்.
தங்களின் யோசனையை கேட்க அரசு முன்வரவேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இத்திட்டத்திற்கு எதிராக தற்போதே ஆங்காங்கே போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தங்களின் யோசனையை அரசு கேட்காவிடில் விவசாயிகள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
விருதுநகர்:
*ஸ்ரீவில்லிபுத்தூர்.
*ராஜயாளையம்.
நெல்லை:
*புளியங்குடி
*சங்கரன்கோவில் (பைபாஸ்)
*கடையநல்லூர்
*தென்காசி
*செங்கோட்டை
இந்த நகரங்களை வடக்கு மாவட்டங்களோடு இணைப்பது இச்சாலை தான். ஆண்டு தோறும் குற்றாலம் சீசன் நேரத்திலும், சபரிமலை சீசனிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையில் பயணிக்கும். இதனால் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக்க அரசு முடிவெடுத்துள்ளது.
பாதையே மாறுகிறது:
புதிதாக வரவுள்ள இந்த நான்கு வழிச்சாலை ஏற்கனவே இருக்கும் பாதையில் இருந்து விலகி அமையவுள்ளது. அதாவது சிவகிரி,வாசு,புளியங்குடி முதலிய ஊர்களுக்குள் செல்லாமல் மேற்கு பகுதியில் அமையவுள்ளது.
பாதிக்கும் பயிர்த்தொழில்:
ஏற்கனவே இருக்கும் பாதையில் இருந்து விலகி புதிய பாதையில் நிறைவேற்றப்பட்டவுள்ள இந்த சாலையால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்படுகிறது. காலங்காலமாக விவசாயம் செய்து வந்த கிணறுகளையும் நிலங்களையும் இழந்து விடுமோ என்று இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் சாலையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால் மேற்கு தொடர்ச்சிமலையின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகுமோ என சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.
மாற்றுவழி உண்டா.?
இந்தச்சாலையை விவசாய நிலங்களுக்குள் செல்லாதவாறும் அமைக்கலாம் என்று அப்பகுதி மக்கள் யோசனை சொல்கிறார்கள். இதனால் 8 கி.மீ குறையவும் வாய்ப்புள்ளதாம்.
தங்களின் யோசனையை கேட்க அரசு முன்வரவேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இத்திட்டத்திற்கு எதிராக தற்போதே ஆங்காங்கே போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தங்களின் யோசனையை அரசு கேட்காவிடில் விவசாயிகள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
விவசாயத்தில் செழிக்கும் திருநெல்வேலியின் மேற்கு பகுதிகளை சீரழியாமல் காப்பது அரசின் கடமை.!

Comments
Post a Comment