Skip to main content

தலைமுறைகள் கடந்தும் தணியாத தாகம்.!

தமிழ்நாட்டிலேயே அதிக அணைகளை நம் திருநெல்வேலி கொண்டிருப்பதால் இங்கு தண்ணீர் பிரச்னையே இல்லை என வெளியூர் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம்மிடமும் ஒரு கண்ணீர் கதை பல தலைமுறையாக நிறைவேறாமல் இருப்பதை அவர்கள் அறிவதில்லை. ஏன் நம்மில் பலருக்கும் கூட அக்கதையின் சோகம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காமரஜர் தீட்டிய கனவுத் திட்டம்.

தமிழ்நாடெங்கும் நீர்நிலைகளை கட்டியெழுப்பிய காமராஜர் தான் இந்த திட்டத்தை தீட்டியவர். 1962 ம் ஆண்டு கடனாநதி,ராமநதி என்ற இரு அணைத்திட்டங்களோடு ஜம்புநதி கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிறகு ஆட்சிப் பொறுப்பை இழந்தார். பின்னர் வந்த திமுக ஆட்சியில் இரு அணைகள் மட்டும் கட்டியெழுப்பப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கைவிடப்பட்ட கால்வாய் திட்டம்:

அணை கட்டியாச்சு.. கால்வாய் எங்கடா.? என்பதைப் போல நீரை தேக்கி வைக்க மட்டும் அணையை கட்டிவிட்டு ஜம்புநதி கால்வாய் திட்ட்டத்தை கைவிட்டது தமிழக அரசு. பிறகு அதிமுக அரசு வந்தது. தென்னகத்தின் கோரிக்கைகள் கோட்டைக்கு பறந்தன. நிறைவேற்றுகிறேன் என்று சொன்ன எம்ஜிஆர் மரணித்துப்போனார். பின்னர் திமுக, அடுத்து அதிமுக என ஆட்சிகள் மாறினாலும் இங்கே காட்சிகள் மாறிய பாடில்லை. வருடாவருடம் மழைப்பொழிவதும் ஆளுக்கு முந்தி கடனா ராமநதிகள் நிரம்புவதும் வெள்ளநீர் வீணாக கடலுக்கு செல்வதும் வாடிக்கையாகி விட்டது. கால்வாய் திட்டத்திற்கான மதிப்பீடும் பல மடங்கு அதிகரித்து விட்டது.

காலியாகும் கிராமங்கள்.!

கால்வாய் வரும் வரும் என்று இரு தலைமுறையாய் காத்திருந்த மக்கள் பிழைப்பு தேடி கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து வருகிறார்கள். இதிலும் உச்சகட்டமாக சில நாட்களுக்கு முன்பு இவ்வூர் இளைஞர்கள் கால்வாய் தாருங்கள். இல்லாவிடில்,  எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என கலெக்டரிடம் மன்றாடியுள்ளனர்.

கங்கையையும் காவிரியையும் இணைக்க திட்டம் போடும் நமது சர்கார் அருகருகே அமைந்துள்ள இரு அணைகளை இணைத்து வறண்ட பாவூர்,கடையம் சுற்றுவட்டாரங்களை வாழ வைக்க வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் பழம்பெரும் கோரிக்கை..!

பாலைவனத்தில் பாலை வார்க்குமா அரசு?

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...