Skip to main content

நெல்லையை புயல்கள் தாக்குவதேயில்லை ஏன்.?

மழைக்காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் தென்னிந்திய தீபகற்பத்தை சுருட்டி எறிவதில் தவறுவது இல்லை. நமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து நீலம்,தானே,வார்தா,ஒக்கி தற்போது கஜா வரைக்கும் அதிதீவிர புயல்கள் நம் தமிழ்நாட்டில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ளன. மேற்கண்ட புயல்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களையே குறிவைத்து தாக்குகின்றன. விதிவிலக்காக ஒக்கி கடந்த ஆண்டு நம் குமரியை ஓங்கி அறைந்து விட்டுச் சென்றது.

நெல்லை அந்த லிஸ்டில் இல்லை:

மழைக் காலங்களில் பெரும் புயல்கள் உருவாகும் போதெல்லாம் அது கரையை கடக்கும் மாவட்டங்களில் நம் திருநெல்வேலி இடம் பெற்றதேயில்லை. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டமாக நாம் இருந்தாலும் நாம் இருக்கும் இடம் இயற்கையிலேயே பாதுகாப்பு மிகுந்தது.

நெல்லையை காக்கும் இலங்கை:

ஆழியின் ஆர்ப்பரிப்பில் இருந்து நம் நெல்லையை காப்பது வேறுயாருமில்லை. நம் தாயக பூமியான இலங்கை தான். வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் தென்தமிழக கடற்பகுதிக்கு நேரெதில் அத்தீவு அமைந்துள்ளது. இதனால் வங்கக் கடல் பகுதி பிளவு பட்டு மன்னார் வளைகுடா என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. அதன் கரையோரத்தில் தான் நெல்லை தூத்துக்குடியின் கரையோர பகுதிகள் அமைந்துள்ளன. வங்கக் கடலின்சீற்றத்தை விட இந்த பகுதிகளில் கடலின் சீற்றம் குறைவாகவே இருக்கும். இதனை ராமேஸ்வரத்திலும்,தூத்துக்குடியிலும் நாம்  உணரலாம். இலங்கை இடையில் அமைந்துள்ளதால் எந்த புயலும் நேரடியாக நம் நெல்லையை தாக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதனை சுனாமி வந்த போது நம் உணர்ந்தோம்.!

கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் சோழ மண்டல கடற்கரை முழுதும் ஆழிப்பேரலையால் ஆவேச தாக்குதலுக்கு உள்ளான போது இங்கே நம் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி நம்மை காப்பாற்றியது.

மேற்கில் காக்கும் பொதிகை மலை:

கிழக்கே இலங்கை தீவு நம்மை காக்கிறது என்றால், மேற்கில் உயர்ந்த சிகரமான அகத்திய மலை நம்மை காக்கிறது. தென்மேற்கு பருவக்காற்றின் கோரத்தாண்டவம் நம் மீது நிகழாமல் இருக்க அம்மேகங்கங்களை தடுத்து மழைநீரை மட்டும் தருகின்றன அம்மலைகள்.

கடந்த ஆண்டு ஒக்கி புயலில் இருந்து நம்மை காப்பாற்றியது இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் தான். பாவம் அதனால் குமரி மாவட்டம் சிக்கிச் சின்னாபின்னமானது.

தொல்லையில்லாத நெல்லை.!

இப்படி எந்த இயற்கை இடர்பாடுகள் வந்தாலும் அதனை தாங்கும் வகையில் இயற்கை நம் நெல்லையை வேலி அமைத்து பாதுகாக்கிறது. இதனால் தான், உலகின் மூத்த குடியும், மூத்த மொழியும் காலங்கள் கடந்து நம் மண்ணில் நிலைப்பெற்றுள்ளன. நெல்லையை அழிக்க இயற்கைக்கும் மனமில்லை.!

Comments

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...