Skip to main content

நெல்லையின் மெரினா ஆகிறது நயினார்குளம்.



 அழகும் பழமையும் மிக்க நம் நெல்லை டவுணில் பரந்து விரிந்து இருப்பது நயினார்குளம். நம் நெல்லை மாநகரத்தை வடக்கு நோக்கி வளர விடாமல் தடுத்து மேற்கு - கிழக்காக வளர வைத்ததில் இந்த நயினார் குளத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு.

நெல்லையின் எழில்!

நெல்லை டவுணுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது நயினார்குளம். இந்த குளத்திற்கு   நீரை தருவது திருநெல்வேலி கால்வாய். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளத்திற்கு தாமிரபரணி நீரை கொண்டுவரும் பொருட்டு சுத்தமல்லி தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து வெட்டப்பட்டது இக்கால்வாய்.

ஆரம்பத்தில் இந்த கால்வாயில் மிகவும் சுத்தமான நீர் தான் ஓடிக்கொண்டிருந்தது.

நாறி நாசமான நயினார்குளம்.

ஆனால் தற்போது கழிவு நீர் கலப்பினால் இந்த குளம் கடுமையாக மாசுபட்டுள்ளது.

நெல்லையின் மெரினா ஆகுமா?

இந்த குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள சாலை நம் நெல்லையின் அழகான சாலைகளுள் ஒன்று. வடக்கு தெற்காக சுமார் 1.5 கி.மீ தூரம் அமைந்துள்ள இச்சாலையில் பயணப்படும் போது நம் நெல்லையப்பர் கோவிலின் நான்கு கோபுரங்களும் கம்பீரமாக காட்சியளிக்கும். தூரத்தில் தெரியும் பொதிகை மலை அழகை இன்னும் கூட்டும். குற்றால சீசன் சமயங்களில் வெளிநாட்டு பறவைகளும் இந்த குளத்தில் வந்து குவியும்.

டவுண் நயினார் குளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி கொடுத்தார் முன்னாள் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன். அழகிய நடைபாதைகள், குளத்திற்குள் மிதக்கும் கட்டிடம் போன்றவை கட்டப்பட்டன.

ஆனால் அதற்கு பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது அந்த கட்டுமானங்கள் எல்லாம் சீரழிந்து சின்னாபின்னமாகி ஆகிவிட்டன.

ஸ்மார்ட் ஆகிறது நயினார்குளம்:

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 38 கோடி ரூபாய் செலவில் நயினார்குளத்தை மேம்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி கையில் வைத்துள்ளது. படகு குழாம், மிதக்கும் ஹோட்டல் போன்ற சுற்றுலா வசதிகளும் அதில் இடம் பெறும் என தெரிகிறது.
மேலும் குளத்தின் கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளுக்கு பிரத்யேக புதிய லாரி முனையம் பழைய பேட்டையில் அமைய உள்ளது.

மேற்கண்ட திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தும் பொழுது நெல்லையின் மெரினாவாக நம் நயினார்குளம் மேம்பட வாய்ப்பு உருவாகும்.

பணிகள் விரைந்து முடிந்தால் நலம் என்பதே நெல்லையர்களின் எண்ணம்.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...