Skip to main content

இன்டஸ்ட்ரியல் காரிடராகிறது நெல்லை-தூத்துக்குடி ரோடு

திருநெல்வேலியில் இருந்து பிரிந்து சென்ற தூத்துக்குடி இன்று தொழில் வளர்ச்சியில் கோவையோடு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி-மதுரை சாலையை இன்டஸ்ட்ரியல் காரிடராக மாற்ற அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

திட்டத்தில் திடீர் மாற்றம்.?

இந்நிலையில் அதற்கு முன்னதாக திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை முதலில் இன்டஸ்ட்ரியல் காரிடராக மாற்றப்படும் என்ற தடாலடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதை ஒட்டி மதுரையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய தொழில்துறை அமைச்சர் M.C சம்பத் சென்னை-கன்னியாகுமரி தொழில் வளர்ச்சி பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லை-தூத்துக்குடி காரிடர் அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொழில்துறைக்கு ஏற்ற பகுதி:

அவ்விழாவில் பேசிய அதிகாரிகளும் தென்மாவட்டங்களின் சிறப்பம்சங்களை வெகுவாக விதந்தோதி உள்ளனர். தமிழ்நாட்டில் மின் வசதி தங்குதடையின்றி கிடைக்கும் பகுதி தென்மாவட்டங்கள் தான் என்று பேசியுள்ளனர். துறைமுகம்,ரயில் பாதை,விமான நிலையம் என சாதகமான பல அம்சங்கள் இங்கு இருப்பதை சுட்டிக் காட்டி பேசியுள்ளனர்.

மாற்றம் காணுமா நம் மண்.?

நம்மூரில் ஏற்கனவே தொடங்கப்பட்ட கங்கைகொண்டான்,நாங்குநேரி தொழில் திட்டங்கள் காத்தாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசின் இப்புதிய அறிவிப்பு உத்வேகத்தை ஏற்ப்படுத்த வாய்ப்பு உள்ளது. தொழில் வளர்ச்சியை தவிர நம் நெல்லைக்கு குறையொன்றுமில்லை. கூடி சீக்கிரம் அந்த குறையும் நீங்கும் என எதிர்பார்ப்போம்.

Comments

  1. Must improve little more ,no entertainment ,only cinema theatres , very much boring ,on Sundays we used to sit inside houses only !!! IT companies must come ,Malls ,parks also must come ,clean the roads ,no street lights ,near reliance markets ,railway junctions no street lights are there !!Full of darkness ,no brightness for nellai city !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...