Skip to main content

நம் நெல்லையர்கள் நாடோடிகளான கதை!


"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது தமிழின் புகழ்ப் பெற்ற முதுமொழி. இந்த புகழ்மொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ, நம் நெல்லையர்களுக்கு மிகச் சரியாக பொருந்தும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொற்கை துறைமுகத்தின் வழியே உலகை அளக்க புறப்பட்ட நமது பயணம் இன்றும் தொடர்கிறது.

உலகமயமாக்கல் நமக்கு பழசு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொற்கை முத்துகளும் பாண்டிய நாட்டு பொருள்களும் ரோமாபுரிக்கு பயணப்பட்டுள்ளன. தென்னாட்டின் மிக பரபரப்பான துறைமுகமாக நம் தாமிரபரணியின் கழிமுகப் பகுதி விளங்கியிருக்கிறது. ஆனால் கடல்கோளால் அந்த துறைமுகம் சீரழிந்தப் பிறகு கடல் வாணிபத்தில் நமது தென்பாண்டிச் சீமை பின்தங்கியது.

நாட்டுக்குள்ளே நாடோடியானோம்:
அதன்பின்னர் பொருள் தேடி இந்த இந்திய நிலப்பரப்பெங்கும் அலைந்து திரிந்தது நம் சமூகம். கடந்த முன்னூறு ஆண்டுகளில் மும்பை,சென்னை,பெங்களுரு,கோவை,
திருப்பூர் என்று வடக்கே பல நகரங்களை வளர்த்ததில் நம் நெல்லை மக்களின் பங்கு மிக மிக அதிகம்.

காரணம் என்ன:
நெல்லை மக்களின் இந்த நாடோடி வாழ்கைக்கு காரணங்கள் ஏராளம்.!
*படித்த படிப்புக்கு போதுமான வேலையில்லாத தொழில் சூழல்.
*‎இங்கே தொழில்துறைக்கு சாதகமான அம்சங்கள் பல இருந்தும் பாராமுகமாய் இருக்கும் சென்னை அரசியல்வாதிகள்.
*பிற பகுதி மக்களின் வாழ்வியலையும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற நம்மக்களின் ஆர்வம்.
*‎பழகிப்போன விவசாயத் தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாறும் எண்ணம் போன்றவை நெல்லை மக்களை நாடோடியாக மாற்றியதில் முக்கிய விஷயங்கள்.

தீர்வு என்ன:
90களின் இறுதியில் நம் நெல்லை பிராந்தியத்தில் நடந்த சாதிக்கலவரம் தென்னிந்தியாவையே உலுக்கியது. இதையொட்டி நடந்த ஆய்வில் போதிய வேலைவாய்ப்பின்மையே நம் நெல்லை மக்களை சா'தீ'ய வலைக்குள் சிக்க வைக்கிறது என்ற உண்மை வெளியே வந்தது.

தொழில்துறையும் செழிக்கட்டும்.
பெயரிலேயே நெல்லை வைத்திருக்கும் நெல்லைக்கு விவசாயமே சரிபடும் என்று பலரும் நினைக்கிறார்கள். விவசாயத்திற்கு லாயக்கற்ற பகுதிகளும் நெல்லையில் அதிகம் இருப்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் நெல்லையில் தொழில் துறை செழிக்கும். அப்படி நடந்தால் தான் நம் திருநெல்வேலி மக்கள்  நாடோடிகளாக திரியும் நிலைக்கு முடிவு பிறக்கும். அதுவரை நல்லது கெட்டதை மட்டுமே சொந்த ஊரில் அனுபவிக்கும் நம் மக்களின் இழிநிலை நீடிக்கவே செய்யும்.

"என்ன வளம் இல்லை இந்த திருநெல்வேலியில்...
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளியூரில்"

என்று கூற நாம் இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ.?😢

Comments

  1. Nanguneri ,kangaikondan la tidel park nu develop aana v can competite with other districts.


    We should prove our unity and show other districts that v r not seperated by caste for development.

    Meanwhile innovative startups will be most preferred solution for development

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...