Skip to main content

தமிழர்களை பிரிக்கிறதா நெல்லை FB பேஜ்கள்?


நம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான பெரிய நகரங்கள் பத்துக்கும் குறைவு தான். அதில் முதலிடம் பிடிப்பது சிங்காரச் சென்னை. நம் மாநிலத்தின் தலைநகரகமாக இருப்பதால் தமிழர்களின் மனம் கவர்ந்த நகரமாக அது இருக்கிறது. சென்னையை மையப்படுத்தி பல மீம்ஸ் பக்கங்கள் முகநூலில் உண்டு. இவற்றிற்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர்.

சென்னைக்கு அடுத்து எது?

மக்கள் தொகையில் சென்னைக்கு அடுத்து கோவையும்,மதுரையும்,திருச்சியும் இருக்கின்றன. இதில் மதுரையின் மீம்ஸ் பக்கங்கள் தமிழகம் முழுவதும் பிரபலம். அது மதுரையைப் பற்றி மட்டும் பேசாமல் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் குறித்தும் பேசுகிறது.

அதைவிட்டால், கோவை திருச்சி பற்றிய முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வருகின்றன.

அசத்தும் நெல்லை அட்மின்கள்:

ஆனால் மேற்கண்ட ஊர்களின் மீம்ஸ் பக்கங்களை போல் அல்லாமல் முழுக்க முழுக்க சொந்த ஊர் பெருமையை பேசி அசால்ட்டாக ஆயிரம் லைக்குகளை அள்ளுகிறது நம்மூர் முகநூல் பக்கங்கள்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் நம்மூர் மீம்ஸ் கிரியேட்டர்களை தற்பெருமை பேசுபவர்கள், தமிழர்களை பிளவுபடுத்துவர்கள் என்றெல்லாம் வசைமாரி பொழிகின்றனர்.

உண்மை இது தான்!

திருநெல்வேலி மக்கள் தங்களது பெருமைகளை உரக்கப் பேசுவது தற்பெருமையால் அல்ல, இவ்வளவு பெருமைகளை நாங்கள் கொண்டிருக்கிறோம். இனிமேலாவாது எங்களை கவனியுங்கள், எங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுங்கள் என்பதற்கு தான்.

வழிகாட்டும் கோவை:

ஒருகாலத்தில் இன்று நம் நெல்லை மண்டலம் இருப்பதைப் போலவே தான் கோவையும் இருந்தது. முழுக்க விவசாயப் பகுதிகள், செழிக்கும் இயற்கை என தொழில் வளர்ச்சி அறவே இல்லாத பகுதியாக அது இருந்தது. ஆனால் கொங்கு மண்டலம் என்ற ஒற்றை புள்ளியில் ஒன்றுபட்டதால் இன்று சென்னைக்கு நிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்மக்கள்.

ஆனால் திருநெல்வேலி மக்களோ சாதி என்ற பிற்போக்குத்தனத்தால் பிளவுபட்டு கிடக்கிறோம்.

இதிலிருந்து விடுபடும் பொருட்டே திருநெல்வேலியன் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைய நாங்கள் முயற்சிக்கிறோம்.

திருநெல்வேலி தமிழன்டா.!

எனவே நாங்கள் தற்பெருமை பேசுபவர்களோ, தமிழர்களை பிரிப்பவர்களோ அல்ல..!

இப்படிக்கு
திருநெல்வேலித் தமிழன்.

Comments

  1. fan of tirunelveli page அட்மின்களும் சரி கமெண்ட் போடறவங்களும் சரி மோடியை எதிர்க்க வேண்டுமென்றால் ஓரணியில் நிற்கிறார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...