Skip to main content

திராவிட அரசியலின் பிறப்பிடமே நெல்லை தான்!


திராவிட அரசியலுக்கு மாற்று வேண்டும் என்னும் குரல்கள் சமீபகாலமாக பெருகி வருகிறது. ஏனென்றால்
தமிழ்நாட்டின் அரசியலை ஐம்பது ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது திராவிட சித்தாந்த கட்சிகள் தான்.  அவ்வளவு வலிமையான திராவிட சிந்தாந்தத்தின் பிறப்பிடம் நம் திருநெல்வேலி தான்.!

திராவிடம் பிறந்தது நெல்லையில்!

சமயப்பணி செய்ய நெல்லை வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் முதலிய மொழிகளை ஆய்ந்துநோக்கி திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்டார். மேலும் இந்த மொழிகளை திராவிட மொழிகள் என்றும் இம்மக்களை திராவிடர்கள் என்றும் அவர் தான் முதலில் அழைத்தார்.

நம் நெல்லையில் இருந்து அவர் கண்டுபிடித்த அந்த வார்த்தைகள் இன்றளவும் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கின்றன.

பெரியாரை உலுக்கிய சேரன்மகாதேவி!

1924 ஆம் ஆண்டில் நெல்லை சேரன்மகாதேவி குருகுலத்தில் நடந்த தீண்டாமை சம்பவமே பெரியாரை காங்கிரசிலிருந்து வெளியேற வைத்தது. அதன் பின்னர் சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார் நம் நெல்லையில் பிறந்த சொல்லான "திராவிடர்" என்ற  பெயரிலேயே கட்சி தொடங்கினார். அவரின் அந்த கட்சி தான் பின்னர் திமுகவாகவும் அதிமுகவாகவும் தோன்றி இன்று ஆலமரங்களாக நிற்கின்றன.

திராவிட சிந்தாந்தவாதியான நெல்லையர்:

திராவிட சித்தாந்தத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றவர்களில் முக்கியமான இடத்தை பிடிப்பவர் நெல்லையரான வைகோ.

இன்று இவரின் அரசியல் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அன்று இவரை சமாளிக்க இந்திரா காந்தியே தடுமாறினார் என்பது தான் உண்மை.

நாடாளுமன்ற விவாதங்களில் திராவிட சித்தாந்தத்தை புகுத்தி இவர் பேசிய பேச்சுகள் அதிதீவிரமானவை.

இப்படி திராவிட சித்தாந்தத்தை தமிழ்நாட்டிற்கே வழங்கிய நம் நெல்லைக்கு திராவிடக் கட்சிகள் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும்.


செய்தார்களா.?

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...