Skip to main content

ஆங்கிலேயர்களின் திருநெல்வேலி !



நகரமயமாக்கலில் நாட்டிலேயே முன்னால் நிற்கும் மாநிலம் தமிழ்நாடு. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இங்கு மாநகரங்கள்
செழித்து இயங்கியிருக்கினறன. பழங்காலத்தில் கொற்கை, மதுரை, பூம்புகார் என பல தமிழக நகரங்கள் வணிக ரீதியில் உலகோடு இணைக்கப்பட்டிருந்தன. இதனால், தமிழகத்தின் பல நகரங்கள்
அன்றே உலகமயமாக்கலுக்கு பழகிப்போனது. அதை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்ட பிராந்தியங்களில் நம் நெல்லை தனித்துவமானது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னர் வணிக ரீதியாக மட்டுமின்றி பல துறைகளிலும் நெல்லை புதுப்பொலிவு  பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்மை தேடி வந்த வாய்ப்புகள் அனைத்தையும் நாம் வெகு அழகாக சுவீகரித்துக் கொண்டோம்.

போக்குவரத்து:

சாலை மார்கமாக மட்டுமே  போக்குவரத்து வசதிகளை பெற்றிருந்த நெல்லை மாவட்டத்திற்கு இருப்பு பாதைகளை அமைத்து கொடுத்தது பிரிட்டிஷ் பேரரசு. கேரளத்தின் கொல்லத்தில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது அவர்களின் ஆகப்பெரும் சாதனை. மலை, சமவெளி பகுதிகளை கடந்து இரு கடல்களையும் இணைக்கும் அசாதாரண திட்டம் அது. இந்த திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகம் பெரு வளர்ச்சி அடைந்து தற்சமயம் நாட்டின் முன்னணி துறைமுகங்களுள் ஒன்றாக திகழ்கிறது. மேலும் நெல்லையில் விளைந்த விவசாய பொருட்கள் கேரளாவை அடையவும் இப்பாபாதை பெருமளவு பயன்பட்டது.  இனியும் பயன்படப்போகிறது.

கல்வி:

தமிழும் சைவமும் தழைத்து ஓங்கியிருந்த திருநெல்வேலி மாநகரில் சாலை தோறும் கல்வி நிலையங்களை துவங்கி ஆன்மீக நகரத்தை ஆக்ஸ்போர்டாகவும் மாற்றினார்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் ஏற்படுத்திய கல்வி நிலையங்கள் தென் தமிழகத்தை அறிவொளி வீசும் பகுதியாக மாற்றின. இன்று கன்னியாகுமரி,தூத்துக்குடி முதலிய மாவட்டங்கள் கல்வி வளர்ச்சியில் முன்னால் நிற்க இக்கல்லூரிகளின் பங்கு அளப்பறியது.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த நெல்லை மக்கள் இதன்மூலம் கல்வி கற்று வெளியூர்களில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நிர்வாகம்:

ஆங்கிலேய ஆட்சியின் போது நம் திருநெல்வேலி அவர்களின் ராணுவ தலைநகரமாக இருந்தது. திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு மாபெரும் ஜில்லாவும் செயல்பட்டுள்ளது. கிராமங்கள் அதிகமிருந்தாலும் ஏராளமான நகர்ப்புறங்களையும் நம் திருநெல்வேலி பெற்றிருந்தது. சுதந்திரம் கிடைத்த நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக நம் திருநெல்வேலி திகழ்ந்திருக்கிறது.

இப்படி ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நம் திருநெல்வேலி பல விதங்களில் பலனடைந்தது.

ஆனால் , அதற்கு நிகராக ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பல ஆளுமைகள் ஒய்யார நடை போட்டதும் இதே திருநெல்வேலி மண்ணில் தான்..!


Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...