Skip to main content

தமிழக அரசுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை ?


     பதவியில் உட்கார்ந்த ஒரே ஆண்டிலேயே சேலத்துக் காரரான தமிழக முதல்வர் பழனிச்சாமி தன் ஊருக்கு விமான சேவையை கொண்டுவந்திருக்கிறார்.
மேலும் சேலத்தில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என்றும், பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை சாலைகளை அமைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று மத்திய அரசை நோக்கி குரல் எழுப்பினார் அப்போதைய தமிழக முதலமைச்சர் அண்ணா. ஆனால் இந்த வார்த்தை தற்போது தமிழ்நாட்டிற்கு மிகச் சரியாக பொருந்திப் போகிறது.

காங்கிரஸை வீட்டிற்கு அனுப்பி ஆட்சிக்கட்டிலில் தி.மு.க ஏறியதில் இருந்தே தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி,குமரி முதலிய மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன.காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணை, மில் என்று காமராஜரின் பெயரோடு தான் அனைத்து வரலாறுகளும் இங்கு உலா வருகிறது.

பின்னர் வந்த அதிமுக ஆட்சியிலும் இதே போக்கு தொடர்ந்தது. விளைவு விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை திருநெல்வேலி மக்களுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆண்டுக்கு பல வன்முறைச் செயல்கள் தென்மாவட்டங்களில் அதிகரித்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் நடந்த சாதி கலவரங்கள் அகில இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது நடந்தது தி.மு.க ஆட்சி. கலவரங்கள் குறித்து ஆராய குழு ஒன்றை அரசு அமைத்தது. அதற்கு சமீபத்தில் காலமான ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ரத்தினவேல் பாண்டியன் தலைமை வகித்தார். அவரின் அறிக்கை தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தியது.

அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானிலும் நாங்குநேரியிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அரசு அமைத்தது.
திருநெல்வேலியின் துர்பாக்கியம், அந்த திட்டம் அரசியல் காரணங்களால் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.

அரசின் ஓரவஞ்சனை:

திருநெல்வேலிக்கு பல திட்டங்கள் கிடைத்தும் அதை செயல்படுத்த முடியாத நிலை நீடிக்கும் போது அரசின் உயர் பதவிகளில் அமரும் வெளியூர் காரர்கள் அவரவர் ஊர்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்கிறார்கள்.

தற்போதைய ஆளும் கட்சியை எடுத்துக்கொண்டால் திருநெல்வேலியை சேர்ந்த பலர் ஆட்சியில் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். 4 எம்.பிக்கள், ஆளுமைமிக்க அரசியல்வாதிகளான பி.ஹெச் பாண்டியன், அவரது மகன் என அரசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள் நம்மூர் காரர்கள்.

அப்படியிருந்தும், நெல்லைக்கு தேவையான திட்டங்களை அவர்கள் கேட்டு பெறாமல் இருப்பது புதிராக இருக்கிறது. தற்போது முதல்வர் தனது சொந்த ஊருக்கு அதிகம் செய்வதை பார்த்தாவது நம்மவர்கள் திருநெல்வேலிக்கான திட்டங்களை பெறவில்லையானால்,  ஆண்டவானாலும் நம்ம திருநெல்வேலியை காப்பாற்றமுடியாது.!


Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...