Skip to main content

தூள்கிளப்பும் தூத்துக்குடி.!


     பாரம்பரியமிக்க நெல்லை மாவட்டம் பெற்றெடுத்த செல்லப் பிள்ளை தூத்துக்குடி. மீன்பிடி கிராமமாக இருந்து தற்போது நெல்லைக்கே சவால் விடும் விதம் வளர்ந்து நிற்கும்  தனித்துவமான மாநகரம். இன்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து சாலை, கடல், ரயில்,வான் என அனைத்து வழிகளிலும் உலகோடு இணைக்கப்பட்ட ஒரே மாநகரம் நம் தூத்துக்குடி. தென்தமிழகத்தின் மிகப் பெரிய தொழில் நகரமாக விளங்கி வரும் தூத்துக்குடியின் வளர்ச்சி பிரம்மிப்பிற்குரியது.

தூத்துக்குடி அன்று

மீனவ கிராமமாக விளங்கிய தூத்துக்குடி பண்டைய பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய கொற்கையின் வடக்கே அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் தூத்துக்குடி மெல்ல மெல்ல வளரத்துவங்கியது.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி இருந்த போது, ஆங்கிலேயர்கள் தூத்துக்குடியில் அடிப்படை வசதிகளை பெருக்க பெரும் நடவடிக்கைகளை எடுத்தனர். நெல்லை வழியாக கொல்லத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்து துவங்கியதும் தூத்துக்குடியின் வளர்ச்சி அதிகரித்தது.
பின்னர் சுதந்திர போராட்ட காலத்தில் பல வீரர்கள் இந்த ஊரில் இருந்தே ஆங்கிலேயருக்கு எதிராக போர் முழக்கமிட்டனர். வ.உ.சி தூத்துக்குடியில் இருந்து சுதேசி கப்பல் விட்டு போராடினார்.

தூத்துக்குடி இன்று:

அன்றைய தூத்துக்குடியோடு இன்றைய தூத்துக்குடியை ஒப்பிடவே முடியாது. ஏனென்றால் இன்றைய தூத்துக்குடி பல பிராம்மாண்ட கம்பெனிகளால் அபாரமாக வளர்ந்து நிற்கிறது. ஸ்பிக் தொடங்கி பல நிறுவனங்கள்  தூத்துக்குடியை வாழவைக்கின்றன.
ஆனால் அதே நிறுவனங்கள் தான் தூத்துக்குடிக்கு பாதமாகவும் அமைந்துள்ளன. அவைகள் வெளியிடும் புகைகளால் திணறுகிறது முத்துநகரம்.

இருந்தும் அம்மக்கள் ஓயாமல் உழைத்து அந்நகரை வளர்க்கின்றனர். தாகத்திற்கான தண்ணீரை தாமிரபரணி தருகிறது. சுவாசிக்க காற்றை பொதிகை தருகிறது. உழைப்பால் உயர்கிறது தூத்துக்குடி. ஒரு நாள் நெல்லையையும் விஞ்சி வளர்ந்து நின்றாலும் ஆச்சரியமில்லை.!
வளரட்டும் ..!
ஏன்னா அது நம்ம வீட்டு பிள்ளை தானல.!


Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...