Skip to main content

திருநெல்வேலியை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது.?

தமிழகத்தில் எத்தனையோ நகரங்கள் இருக்க திருநெல்வேலியை மட்டும் ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது. இந்த கேள்வியை வெளியூர் மக்களிடம் வைத்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொன்னார்கள். அவற்றுள் மிக முக்கியமான காரணங்களை இப்போது பார்ப்போம்.

தாமிரபரணி:

தமிழ்நாட்டில் ஓடும் ஒரே வற்றாத ஜீவ நதியாக அது இருப்பதால் அதன் கரையில் இருக்கும் திருநெல்வேலியை எங்களுக்கு பிடிக்கும் என்றனர் சிலர். மேலும் அதன் சுவை தனித்து இருப்பதும் எங்களை கவர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் திருநெல்வேலி வாழ்கையை எங்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள்.

திருநெல்வேலி அல்வா:

தாமிரபரணி தண்ணீரின் சுவையில் கிண்டப்படும் அல்வாவை தயாரிப்பதால் திருநெல்வேலியை நினைத்தாலே இனிக்கும் என்கின்றனர் சிலர். மேலும் எத்தனையோ வகையான அல்வாக்கள் வந்துவிட்ட போதிலும் இன்னமும் மவுசு குறையாமல் திருநெல்வேலி அல்வா திகழ்வதாக அவர்கள் பூரிக்கிறார்கள்.இதனால் தான் தங்களுக்கு தெரிந்த திருநெல்வேலி காரர்களிடம் அல்வா வாங்கிவரச் சொல்லி நச்சரிக்கிறார்களாம்.

நெல்லை மக்களின் அன்பு:

காலங்காலமாக வெளியூர் சென்று பொருள் தேடும் வழக்கத்தை கொண்ட நம் நெல்லை மக்கள் பெற்றுள்ள பெரிய விருதுகளுள் இந்த பெருமை முக்கியமானது. பிறர் மீதான அக்கறை கலந்த அன்பால் தான் போன ஊரிலும் மக்களை கவர்ந்து வென்றுவிடுவார்கள் நம் நெல்லையர்கள். அதற்கு உதாரணமாக பல தொழில் அதிபர்களை கூறமுடியும்.

சுற்றுலா:
தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாக நெல்லை திகழ்வதால் திருநெல்வேலியை அவர்களுக்கு பிடித்துள்ளதாம். குற்றாலம்,பாபநாசம்,மணிமுத்தாறு என செலவில்லாமல் நிறைவான ஆனந்தத்தை அந்த இடங்கள் தருகின்றன. இதுவும் பிற மக்களுக்கு நம் திருநெல்வேலியை பிடிக்க காரணமாக அமைந்துள்ளது.

நெல்லைத் தமிழ்.:

இவ்வளவு அழகான ஊரில் இருந்து வரும் தமிழும் அழகாகத் தானே இருக்கமுடியும். அதனால் திருநெல்வேலி தமிழை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்கள். எங்களுக்கு தெரிந்த திருநெல்வேலி காரர்களிடம் அவர்களின் தமிழை கேட்பதற்காக ஏதாவது பேசிக்கொண்டே இருப்போம் என்றும் சொல்கிறார்கள்.

திருநெல்வேலிக்காரர்களுக்கு மட்டுமல்ல மற்ற ஊர்க்காரர்களுக்கும் நம்ம ஊரைப் பிடிக்கிறது என்றால் சும்மாவா.! கெத்துதானே.?

Comments

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...