Skip to main content

கடவுளின் தேசத்துடன் இணைந்தது திருநெல்வேலி.!

கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களால் கடவுளின் சொந்த தேசம் என்று அழைக்கப்பபடுகிறது கேரள மாநிலம். இந்த மாநில ரயில் பாதைகள் இயற்கையோடு இணைந்து ரம்மியமாக அமைந்துள்ளன. பசுமையான மலைகள்,அழகிய பள்ளத்தாக்குகள் என இந்தியாவின் மிகச் சிறந்த இயற்கை சுற்றுலா தடமாக இது திகழ்கிறது. இந்த தடத்தில் கேரளத்துக்கு உள்ளாகவே பல ரயில்கள் இயக்கப்பட்டு வந்தபோதிலும் திருநெல்வேலியோடு முழுவதும் இணைக்கப்படாமலேயே இருந்தது. ஆனால் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. செங்கோட்டை-புனலூர் மலைப்பாதை நேற்று திறந்துவைக்கப்பட்டதால், நெல்லை மாவட்டம் நேரடியாக கேரளாவோடு இணைந்தது.

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பாதையில் நாளை மறுநாள் (9ம் தேதி) முதல் ரயில்கள் ஓட உள்ளது. கேரள மாவட்டமான பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை இயக்கப்ட்டுவந்த பாலருவி எக்ஸ்பிரஸ் தென்காசி,அம்பை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும்,  கொல்லம்-தாம்பரம், கொல்லம்-மதுரை,கொல்லம்-நெல்லை என புதிய ரயில் சேவைகளும் விரைவில் துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இயற்கை விரும்பிகளுக்கு வரப்பிரசாதம்:

தொடங்கவுள்ள புதிய ரயில் பாதை இயற்கை காதலர்களுக்கும், வன விரும்பிகளுக்கும் பெரும் விருந்தாக அமைய உள்ளது. செங்கோட்டை-ஆரியங்காவு கணவாய் வழியாக இந்த பாதை செல்வதால் அடர்ந்த மலைப்பகுதிகளை கண்குளிர தரிசிக்கமுடியும். தற்போது பருமழைக் காலம் துவங்கியுள்ளதால், இயற்கையின் ஆனந்த கூத்தாட்டத்தை புத்துணர்வோடு அனுபவிக்க திருநெல்வேலி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்லையின் சுற்றுலா பெருமைக்கு மேலும் ஒரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...