Skip to main content

நெல்லையின் பெருமை: தாமிரபரணி.

     தமிழகத்தில் பிறந்து தமிழகத்தை மட்டுமே செழிக்க வைத்து பின் தமிழக கடல்பரப்பிலேயே கலந்து விடும் ஒரே நதி தாமிரபரணி. வருடத்தின் அனைத்து நாட்களிலும் தண்ணீர் ஓடும் மிகச் சில இந்திய நதிகளில் இதுவும் ஒன்று. காவிரி, முல்லைப்பெரியார் போல பிற மாநிலத்திடம் நம் தமிழர்களை   கையேந்த விடாத அற்புத நதி.இதன் மொத்த நீளம் 120 கி.மீ தூரம்.

பிறப்பு:

     செழிப்பு மிகுந்த மேற்கு தொடர்ச்சி மலையில் பூங்குளம் என்னும் பகுதியில் தாமிரபரணி நதி பிறக்கிறது. பின்னர், நூற்றுக்கணக்கில்  கிளைநதிகள் ஒன்று சேர்ந்து பாபநாசம் அணையை  அடைகிறது.  13 கி.மீ வடக்கு நோக்கியே மலை மீது  பயணிக்கும் தாமிரபரணி பாபநாசத்தில் வந்து கிழக்காக திரும்புகிறது. 

அதன் பின்னர் விக்கிரமசிங்கபுரம்,அம்பை, கல்லிடைகுறிச்சி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, கோபாலசமுத்திரம் முதலிய ஊர்களை கடந்து திருநெல்வேலலியை அடைகிறது. பின்னர் நெல்லையில் வடக்கு நோக்கி திரும்பி பின்னர் கொங்கராயங்குறிச்சியில் மீண்டும் தெற்காக திரும்பி ஆதிச்சநல்லூரில் கிழக்காக திரும்புகிறது. பின்னர் ஸ்ரீவைகுண்டம் வழியாக புன்னைக்காயலில்  வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

சிறப்புகள்:

தமிழ்நாட்டில் ஓடும் ஒரே ஒரு வற்றாத நதி இதுதான். தண்ணீரின் சுவை வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடிக்கு இருக்கும். ஓடி வரும் வழியில் பல லட்சம் விளைநிலங்களை செழிக்க வைக்கிறது. அதனால் தான் நெல்லை மாவட்டம் தமிழகத்தின் 2 வது நெற்களஞ்சியமாக திகழ்கிறது.  பாரம்பரியமிக்க பல நூறு கோவில்கள் இதன் கரைகளில் அமைந்துள்ளன.

ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் ஆற்றின் கரையோரத்தில் நடந்த அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது. அன்றைய பாண்டியர்களின் தலைநகரமாக அந்த ஊர் செயல்பட்டது. பின்னர் கடல் கொந்தளிப்பால் மதுரைக்கு தலைமையிடத்தை பாண்டியர்கள் மாற்றினார்கள்.

இப்படி நெல்லை மண்ணை வாழ்வாங்கு வாழவைத்த   தாமிரபரணியின் இன்றைய நிலைமை கவலையளிக்கும் வகையில் உள்ளது. நெல்லையை வாழ வைக்க பிறந்த அந்த நதியை நெல்லை மாநகரமே அதிகமாக மாசுபடுத்துகிறது. கழிவுகளை அதிகமாக நதியில் சேர்ப்பதால் நதி கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறது. நாம் பருகும் தாமிரபரணி தண்ணீர் அமிர்தமாக இருக்கிறது. ஆனால், நம் எதிர்கால தலைமுறையும் அந்த சுவையை பெற என்ன செய்ய போகிறோம் நாம்...?

நம்மை வாழ வைத்த நாமே சாகடிக்கிறோம். இது முறைதானா..?

சிந்திப்போம்.! தாய் தாமிரபரணியை காப்போம்!


Comments

  1. Mukkudal la odalaya ingatha ya 3river join aguthu Atha yen yaru solla matringa

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...