Skip to main content

தாமிரபரணி மகாபுஷ்கரணி ஏன் நெல்லைக்கு முக்கியம்.?

திருநெல்வேலியின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் விளங்கும் நம் தாமிரபரணி நதியில் வரும் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 22 வரை மகா புஷ்கரணி விழா நடைபெறவுள்ளது. ஞானத்திற்கு உகந்தவராக கருதப்படும் குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு மகா புஷ்கரமாக கொண்டாடப்படவுள்ளது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிகழ்வு நடைபெறவுள்ளதால் இந்திய அளவிலான முக்கியத்துவத்தை நம் தாமிரபரணி நதி பெற்றுள்ளது. இன்னும் 144 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இவ்விழா மீண்டும் நம் மண்ணில் நிகழுமாம்.

எனவே இது குறித்து நெல்லை மக்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்விற்கு எதிராக சில கட்சிகளும் அமைப்புகளும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். இந்நிகழ்வால் தாமிரபரணி பெருமளவு மாசுபட்டு விடும் என்றும் இந்நிகழ்வு இதற்கு முன்பு நெல்லையில் நடந்ததில்லை என்றும் பல வாதங்களை முன்வைக்கிறார்கள்.  1882 திருநெல்வேலி சரித்திரத்தில் இந்நிகழ்வு பதிவாகவில்லை என்ற நியாயமற்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

இது நெல்லை மக்களை ஒரு வித கவலையில் ஆழ்த்தியுள்ளது.  ஏற்கனவே பன்னெடுங் காலமாக நெல்லையின் கலாச்சாரமும், அரும்பெருமைகளும் அழுத்தி வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த நிலை தற்போது தான் மாறத்துவங்கியுள்ளது. புண்ணிய நதிகள் பட்டியலில் நம் தாமிரபரணி புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இந்நிலையில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இவ்விழா நம் நெல்லையை குறித்தும் தாமிரபரணியின் சிறப்புகள் குறித்தும் இந்திய அளவிவில் பிரபலப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.

ஒரு கோடி மக்கள் திரளவுள்ள இவ்விழாவால் நெல்லை மாவட்டம் விழாக் கோலம் பூணவுள்ளது.

மேலும் இவ்விழாவால் மாசு ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
நாமும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம். தாமிரபரணியின் பெருஞ்சிறப்புகளை உலகெங்கும் பரப்புவோம்.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...