Skip to main content

பரியேறும் பெருமாளால் நெல்லைக்கு பெருமையா சிறுமையா.?

   சமீபத்தில் வெளியான பிரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழக மக்களிடையே மனமுவந்த வரவேற்பை பெற்றுள்ளது. நம் திருநெல்வேலியை கதைக்களமாக கொண்ட படங்கள் எப்போதும் பெருவெற்றி பெறும் என்ற கூற்றுக்கு சமீபத்திய உதாரணமாக இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படத்தின் கதை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்தாலும் கதையின் கருவான காதல் நம் நெல்லையில் தான் உருப்பெருகிறது. அதுவும் இதற்கு முன் எந்த படத்திலும் காட்டப்படாத சட்டக் கல்லூரியில் அக்காதல் அரும்புவது கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது.
மேலும் படத்தில் நம் திருநெல்வேலியின் சுற்றுப்புறங்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெருமையா.? சிறுமையா.?

காட்சி ரீதியில் திருநெல்வேலியை மிக அற்புதமாகக் காட்டியிருந்தாலும் படத்தின்  கதாப்பாத்திரங்களாக வருபர்கள் நம் திருநெல்வேலிக்காரர்களை சரியாக பிரதிபலிக்கிறார்களா என்றால் பெருத்த சந்தேகமே ஏற்படுகிறது.  கதை பெரும்பாலும் சாதிய அவமானங்கள் குறித்தே பேசுகிறது. ஈவிறக்கமற்ற அந்த சாதியக் காட்சிகளை பார்க்க்கும் போது நம்ம திருநெல்வேலியில் இந்தளவுக்கு நடக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அது இயக்குனரின் அனுபவத்திற்கு உண்மையாகவே இருந்தாலும் தற்போது பெருமளவு  மாறிவிட்ட நெல்லை மக்களின் வாழ்விற்கு அது அன்னியமாகவே தெரிகிறது.

காலம் காலமாக இதே சாதிய முத்திரையோடு ஒதுக்கப்பட்ட பகுதிகளாக இருந்த நம் நெல்லை மண்டலம், தற்போது தான் பிற பகுதி மக்களால் பெருமைமிகு மண்ணாக புகழப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதையும் நம் நெல்லையின் அந்தகால நெகட்டிவ் பக்கங்களைப் பற்றி பேசுவது வேதனையையே அளிக்கிறது. காலங்காலமாக தமிழ் சினிமா நம் திருநெல்வேலியை ரவுடிகளின் பூமியாகவும் கொலைக்களமாவுமே சித்தரித்து வந்துள்ளன. இந்த பரியேறிய பெருமாளும் அதே ட்ராக்கை கையிலெடுத்திருப்பது திருநெல்வேலிக் காரர்களை வேதனைப்படுதுகிறது என்பதே உண்மை.!

Comments

  1. Jathi Innum irukatha seikirathu Namma nellai il.....Ithu unamai...Fact Perumal.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...