Skip to main content

கம்பீரமான திருநெல்வேலி திரையரங்குகள்!

திருநெல்வேலி என்ற பெயருக்கே தனி கம்பீரமும் கெத்தும் உள்ளபோது, இங்கே இருக்கும் கட்டுமானங்களுக்கு இருக்காதா என்ன. நெல்லையப்பர் கோவில் கோபுரத்தின் கம்பீரம் பற்றி அனைவருக்குமே தெரியும். உயரம் குறைவாக இருந்தாலும் ராஜ கலையில் எழுந்து நிற்கும் அந்த கோபுரத்தின் அழகே தனிதான். அதேப் போல நெல்லை ஈரடுக்கு மேம்பாலம், சுலோச்சனார் பாலம் என பல கம்பீரமான  கட்டுமானங்கள் நம் நெல்லையில் உள்ளன. அந்த வகையில் நம் திருநெல்வேலியின் தியேட்டர்களும் தனித்துவமான கலை அழகால் நிரம்பியவை. தமிழ்நாடெங்கும் தியேட்டர்கள் படம் பார்க்க மட்டுமே கட்டப்பட்டிருந்த நிலையில் இங்கே நம் நெல்லையில் அவை கட்டிடக்கலை நுணுக்கங்களால் செதுக்கப்பட்டன என்றே சொல்லலாம்.

சென்ட்ரல்:

இருபது வருடங்களுக்கு முன்பு வரை திருநெல்வேலியில் சினிமா என்றால் முதலில் நினைவிற்கு வருவது சென்ட்ரல் தானாம். நெல்லை சந்திப்பிற்கும் டவுணுக்கும் மத்தியில் இந்த திரையரங்கம் அமைந்திருந்ததால் இதை Central என அழைத்தார்களாம். இந்த திரையரங்கம் கட்டப்பட்ட புதிதில் ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றாக திகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மதுரை தங்கம் திரையரங்குக்கு இருந்த மாஸ் இதற்கு இருந்துள்ளது. லிப்ட் வசதி, குழந்தைகளுக்கான தொட்டில் வசதி என பல வசதிகள் இங்கே இருந்துள்ளன. ஒரே நேரத்தில் 2000 பேர் வரை படம் பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக இத்தியேட்டர் இயங்கியுள்ளது. இதன் தோற்றம் கப்பல் மாதிரியும், ராஜ அரண்மனை போலவும் தோற்றமளிக்கும், ஆங்காங்கே காங்கிரீட் சிலைகள் என கட்டிடமே காவியமாக கட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெறும் காற்று உலாவும் இடமாக மாறிப்போனது பெருந்துயரம்.!

ரத்னா:

சென்ட்ரல் தியேட்டருக்கு அருகிலேயே இருந்து வணிக சவால் விட்ட திரையரங்கு இது. கிட்டத்தட்ட சென்ட்ரல் தியேட்டரின் பாதி அளவுக்கு இது கட்டப்பட்டுள்ளது. இதுவும் அரண்மனை போன்ற வடிவமைப்பில் தான் அமைந்துள்ளது. இதற்கு சற்று அருகில் இருந்த பார்வதி திரையரங்கமும் தனித்துவமான அமைப்போடு விளங்கியது. அது தற்போது பொது அரங்கமாக மாறிவிட்டது.

லெட்சுமி:

கிட்டத்தட்ட சென்ட்ரல் திரையரங்கிற்கு நிகரான பிரம்மாண்டத்தோடு அமைந்திருந்தது இத்தியேட்டர். நெல்லை டவுண் வயல் வெளி ஓரத்தில் அமைந்திருந்த இத்தியேட்டரில் பல படங்கள் ஓடி வசூல் சாதனை புரிந்துள்ளன. குறுக்குத்துறை ஆற்றில் குளியல் போட்டு விட்டு இதில் சினிமா பார்த்த அனுபவங்கள் அதிகம் பேருக்கு உண்டு. இதுவும் தற்போது மண்டபமாகி விட்டது.

ராம்,முத்துராம்.!

நெல்லை இளைஞர்களின் மனம் கவர்ந்த தியேட்டரான இதுவும் தனி கம்பீரத்தோடு திகழும் கட்டிடம் தான்.! தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஈரடுக்கு திரையரங்கமாக இது திகழ்கிறது. கட்டிடக் கலை அம்சங்கள் அதிகம் இல்லையென்றாலும் திருநெல்வேலியின் சினிமா கெத்தை தக்க வைக்கும் திரையரங்கமாக இது திகழ்கிறது. பெரும் நட்சத்திரங்கள் படம் வெளியாகும் போது இங்கு வைக்கப்படும் கட்டவுட்கள் தமிழகம் முழுதும் பேசு பொருளாகும்.!

இவைத் தவிர கணேஷ்,பாம்பே,அருணகிரி போன்றவைகளும் திருநெல்வேலியின் சினிமா தாகத்தை தீர்த்து வைக்கும் அரங்கங்களாக திகழ்கின்றன. அனைத்திலும் கம்பீரத்தோடு திகழும் நம்ம திருநெல்வேலி, திரையரங்குகள் விஷயத்திலும் கம்பீரம் குறையாத ஊராகவே திகழ்வது உண்மையிலலேயே கெத்து தானே.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...