Skip to main content

புரோட்டான்னா திருநெல்வேலி காரங்களுக்கு உசுரு.!

சென்னையில் புரோட்டா விலையை கேட்டு அதிர்ந்த நெல்லையர்கள் சிலர் புரோட்டா கடையை சூரறயாடியது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

கடையையே சூறையாடும் அளவிற்கு புரோட்டா மீது பிரியம் வைத்திருக்கும் நம்ம ஊர்மக்களை என்னவென்று சொல்வது.?
நெல்லைக்கும் புரோட்டாவுக்குமான உறவு அப்படிப்பட்டது.

புரோட்டாவின் பூர்வீகமே நம்மூர் தான்!

இரண்டாம் உலகப் போரின் போது கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் களத்தில் இறக்கிவிடப்பட்ட மைதா மாவு நம் நெல்லை தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களில் புரோட்டாவாக அவதாரம் எடுத்ததாம்.

புரோட்டாவின் மகிமை:

கடும் உழைப்புக்கு சொந்தக்காரர்களான நம்மூர் விவசாயிகள் நாள் முழுவதும் வயல் வரப்புகளில் வேலை பார்த்துவிட்டு அகோரப் பசியோடு வீடுதிரும்புவர். அவர்களின் பசியை அடக்கும் மகிமை புரோட்டாவை தவிர எதற்கும் இருக்காது. புரோட்டாவை சுடச்சுட பிய்த்து போட்டு குளிர சால்னா ஊத்தி ஒரு பிடி பிடிக்கும் அனுபவமே தனி தான்.!
அதனாலேயே நம்மூர் உழைப்பாளர்களின் உற்ற தோழனாக புரோட்டா உருமாறியது.

ருசியான சால்னா:

புரோட்டாக்கள் தமிழ்நாடெங்கும் புழக்கத்தில் வந்துவிட்டாலும் அதன் துணையான சால்னா நம்மூரில் தான் டாப்.! தேங்காய் விழுதால் நிரம்பி நல்லெண்ணை மணம் வீசும் சால்னா புரோட்டாவை பதமாக்கி சாப்பிட ஏற்றதாக மாற்றுகிறது. நம்மூர் சால்னாவின் ருசிக்கு தாமிரபரணி தண்ணீர் தான் காரணம் என்றும் கூறுவோர்கள் உண்டு.

புரோட்டாக்கள் பலவிதம்:

தென்தமிழகத்தில் தான் புரோட்டா உருவானது என்றாலும் இங்கே ஒவ்வொரு ஊரிலும் வகை வகையான புரோட்டா தயாராகிறது.

*தூத்துக்குடியில் பொறித்த புரோட்டா
*‎திருநெல்வேலியில் சாஃப்ட் புரோட்டா
*‎விருதுநகர் வீச்சு புரோட்டா

என ஊருக்கேற்ற புரோட்டாக்கள் இங்கே உண்டு. ஆனால் சால்னா ஒன்று தான்.!

ரொட்டியால் அடையாளம் பெற்ற இடங்கள்

புரோட்டாவை ரொட்டி என அழைக்கும் வழக்கமும் நம்மிடம் உள்ளது. ரூசியான ரொட்டிக் கடை இருக்கும் இடங்கள் நம்மூரில் முக்கிய லேண்ட் மார்க்-குளாக திகழ்கின்றன.

திருநெல்வேலியை பொறுத்தவரையில் இளங்கோ,வைரமாளிகை,A1, முதலிய கடைகளும் செங்கோட்டையில் பார்டர் கடையும்,வி.கே.புரத்தில் சர்தார் ஸ்டாலும் ருசியான புரோட்டா சால்னாவுக்கு பெயர் போன கடைகள்....

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அத்தனை கடைகளிலும் ஒரு புரோட்டாவின் விலை 5-8 ரூபாய்க்குள் தான்.!

செலவின்றி ருசியை அனுபவிப்பவர்கள் நாங்கள்.! டாட்.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...