Skip to main content

மெல்ல விடைபெறுகிறது நம் பழைய ஜங்ஷன்.!

ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் துரித கதியில் நடந்துவருகிறது. இந்நிலையில் அங்கு ஒரு விசிட்:

பேருந்து இல்லா நிலையம்:

பிரைவேட் பஸ்களின் ஹாரன் ஒலியால் தினமும் அலறும் ஜங்ஷன் பஸ்டாண்டில் தற்போது அமைதி தவழ்கிறது. கேடிசி பேருந்துகள் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்தை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் கடந்து செல்கிறார்கள். "டவுண்,மார்க்கட்,ஹைகிரவுண்டே..."என்று நம்மூர் கண்டெக்டர்களின் காட்டு கத்தை கேட்க முடியவில்லை.

ஜங்ஷனை சுற்றும் பேருந்துகள்:

ஜங்ஷன் மூடப்பட்டுள்ளதால் ஜங்ஷனுக்கு வரும் பேருந்துகள் ஜங்ஷனை ஒரு சுற்று சுற்றி வந்து மக்களை இறக்கி விடுகின்றன. மேற்கிலும் கிழக்கிலும் தற்காலிக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அலங்கோலமாய் காட்சியளிக்கிறது.

பேருந்து நிலையத்தை நவீனமாக்கும் பணிகள் ஆரம்பித்து விட்டதால் பஸ்டாண்டின் மேற்கூறைகள் அகற்றப்பட்டுள்ளன. பாளை. நகர பேருந்துகள், ரூட் பஸ்கள் வந்து செல்லும் பகுதி புயல் வீசிய பகுதியைப் போல காட்சி தருகிறது. மேற்கூறைகள் இல்லாமல் அந்த பகுதியை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

மைய பகுதியின் நிலை:

பேருந்து நிலையத்தின் மையப்பகுதியிலும் ஆங்காங்கே கடைகளின் கூரைகள் அகற்றப்பட்டுள்ளது. நாம் காலை,மாலை நேரங்களில் டீ,வடை சாப்பிட்ட கடைகள் காலியாகியுள்ளன. மூன்று ரூபாய் வடைக் கடையும் காலிசெய்யப்பட்டுள்ளது.

விடைபெறுகிறது பழைய பேருந்து நிலையம்:

சுமார் 62 ஆண்டுகளாக நெல்லை மக்கள் நடந்து திரிந்த அந்த பகுதி இப்போது மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம் நெல்லை மக்களின் வாழ்வில் பல தருணங்களை அந்த பேருந்துநிலையம் அழகாக்கியுள்ளது.

நம் நெல்லையின் மூன்று தலைமுறைக்கு பயண உற்சாகத்தை ஊட்டிய ஜங்ஷன் (பழைய) பேருந்து நிலையம் நம் நினைவில் என்றென்றும் நிறைந்திருக்கும்.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...