Skip to main content

நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுத்தது என்ன?


ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் நம்ம திருநெல்வேலியில் இதையெல்லாம் செயல்படுத்துவார்களா என்ற சந்தேகம் நம் நெல்லை மக்களிடையே நிலவியது.

ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் தூர எறிந்து விட்டு நெல்லையை ஸ்மார்ட் ஆக மாற்ற கடும் உழைப்பை மேற்கொண்டு வருகிறது நெல்லை மாநகராட்சி...

அடுத்தடுத்து அதிரடி..!

நெல்லையை ஸ்மார்ட் ஆக்க முதலில் குப்பை மேலாண்மையை கையில் எடுத்தது மாநகராட்சி நிர்வாகம். மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு சிறந்த முறையில் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநகரமாக நெல்லை மாறியது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சி விருதையும் நம் நெல்லை தட்டிச்சென்றது.

இதற்கிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் நெல்லையில்  தொடர்ந்து எடுக்ககப்பட்டு வருகின்றன.

இதுவரை நடந்தது என்ன?

1. நெல்லை மாநகராட்சி அலுவலகப் பூங்கா அழகுற தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
2. ‎அம்ருத் திட்டத்தின் கீழ் பல இடங்களில் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
3.   ஜங்ஷன் பேருந்து நிலையத்தை நவீனமாக்கும் பணிகள் வெகுவிரைவில் தொடங்க. உள்ளன.

இனி வருவது:

1. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லையில் தொழில்முனைவோர் குழுமம் உருவாகிறது. அதற்கு பிரம்மாண்ட கட்டிடங்களும் எழுப்பப்படுகின்றன. டவுண் பொருட்காட்சி திடலில் அம்மையம் அமைகிறது.

2. இலந்தைகுளத்தில் பொழுதுபோக்கு பூங்கா பிரம்மாண்ட முறையில்  அமைந்து வருகிறது.

3. ரெட்டியார்பட்டி மலைப் பிளவில் காட்சி கோபுரம் அமையவுள்ளது

4. ‎புதிய பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்பட உள்ளது.

5. ‎லாரிகளுக்கு தனி முனையம்.

6. ‎நெல்லையப்பர் கோவிலைச் சுற்றிய பகுதிகள் அழகுபடுத்தப்பட உள்ளது.

7.‎ நயினார்குளம் மேம்படுத்தப்படவுள்ளது.

இவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் மாநகர நிர்வாகம் காய்களை நகர்த்தி வருகிறது. நெல்லை பொறுப்பு ஆணையாளர் திரு.நாராயணன் நாயர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நெல்லை ஸ்மார்ட் ஆகும் என்று நினைத்தோம்... ஆனால் இவ்வளவு ஃபாஸ்ட்டாக ஸ்மார்ட் ஆகி வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...