Skip to main content

தாயை இழக்கிறோம்.?

தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரபரணி 4,000 அடி உயரமான அகத்திய மலையில் பிறக்கிறது. வித விதமான மூலிகை மரங்களை தழுவி பாய்வதால் இதற்கு மருத்துவ நதி என்ற பெயரும் உண்டு. சுமார் 120 கி.மீ பாயும் இந்த நதி நெல்லை,தூத்துக்குடி மாவட்ட விவசாயத்தை செழிக்க வைக்கிறது. தமிழகத்தில் ஆபத்தில் சிக்கியுள்ள நதிகளில் முதன்மையானதாகவும் தாமிரபரணியே திகழ்கிறது. இரண்டு மாவட்ட விவசாயத்திற்கும் ஐந்து மாவட்ட குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் இந்த நதிக்கரையோரம் ஏராளமான தொழிற்சாலைகள் முளைத்துள்ளதே அதற்கு காரணம். தொழிற்சாலைகளின் இயக்கத்திற்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் நீர் ஆற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது. எனினும் தொழிற்சாலைகளுக்கு அடுத்து தாமிரபரணியை நாம் தான் அதிகமாக மாசுபடுத்துகிறோம்.

பாபநாசத்தில் மலையிலிருந்து இறங்கி சமவெளியில் தாமிரபரணி ஓடத் துவங்குகிறது. அதில் இருந்து வி.கே.புரம், அம்பை,கல்லிடைக்குறிச்சி,சேரன்மகாதேவி முதலிய ஊர்களில் நதி மாசுபாட்டை சந்திக்கிறது.  ஆலைக் கழிவுகளும் ஆற்றில் சேர்கின்றன. அதை தொடர்ந்து திருநெல்வேலி மாநகருக்குள் தாமிரபரணி நுழையும் போது மிகக் கொடுரமாக ஆறு மாசுபடுகிறது. மேலப்பாளையம், கருப்பந்துறை,சிந்துப்பூந்துறை,வண்ணார்பேட்டை முதலிய இடங்களில் இருந்து ஓடி வரும் சாக்கடை நீர் தாமிரபரணியில் கலந்து அதை சின்னாபின்னமாக்குகிறது. இதனால் ஆற்று நீர் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இந்த தாக்குதலை தாங்கிக்கொண்டு வல்லநாடு,ஸ்ரீவைகுண்டம், முதலிய ஊர்களை கடந்து ஆத்தூர்,ஏரல் தாண்டி கடலில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடலில் சென்று கலக்கிறது.

தாமிரபரணி நதி அதிகம் மாசுபடுவது திருநெல்வேலி மாநகரில் தான். சுமார் 70% மாசுபாடு நெல்லை மக்களால் தான் ஏற்படுகிறது. நமது தவறை நாம் சரிசெய்யாவிட்டால், இன்று நாம் பார்க்கும் தாமிரபரனியை நம் எதிர்கால சந்ததியினர் கூவமாகவே பார்ப்பார்கள். அந்த நிலை ஏற்படாமல் இருக்க நம்மாலான முயற்சிகளை செய்து நதியை காக்க வேண்டும். தாகம் தீர்க்கும் தாயை நாம் இழந்துவிடக் கூடாது.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...