தமிழ்நாட்டு நிலப்பரப்பை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவடைய உள்ளது. சித்திரை மாதத்தின் உட்சபட்ச வெப்பம் இந்த காலக்கட்டத்தில் நிகழும். ஆனால், நம் திருநெல்வேலியை பொறுத்த அளவில் இந்த அக்னி நட்சத்திரம் பொதுவாக எடுபடுவதில்லை. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் நெல்லையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. சில நாட்களில் மழையும் பெய்தது. சென்ற ஆண்டும் இதே போன்ற நிலையே நீடித்தது. இதை வைத்து நெல்லை மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது பிற ஊர் மக்கள் அய்யய்யோ என்ற போதும் நம் நெல்லை அரண்டது கிடையாது. அதேப் போல அது முடிவடையும் போதும் அப்பாடா என்று சொல்லும் வழக்கமும் நம் நெல்லையின் அகராதியில் கிடையாது. அது தான் நெல்லை.!
பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

Comments
Post a Comment