Skip to main content

நெல்லையில் எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனை.!

நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சட்டக்கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வரும் ஜனவரியில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

மூன்றில் ஒன்று நெல்லையில்:

தமிழகத்தில் மூன்று இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. நம் நெல்லையோடு சேர்த்து மதுரை மற்றும் தஞ்சையிலும் இந்த மருத்துவமனைகள் அமைகிறது.

எய்ம்ஸ்-க்கு நிகரான வசதிகள்:

நம் நெல்லையில் அமையவுள்ள பல்நோக்கு மருத்துவமனையை தமிழக அரசின் எய்ம்ஸ் என வர்ணிக்கலாம். கிட்டத்தட்ட எய்ம்ஸ் அளவுக்கான நவீன சிகிச்சை முறைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

நெல்லை மருத்துவமனையின் சிறப்பு:

நம் நெல்லையை பொறுத்தவரை மாவட்டத்தின் மிகப் பெரிய மருத்துவமனையாக திகழ்வது மேட்டுதிடல் மருத்துவமனை தான். 1958 ல் காமராஜரால் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1964ல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்தது. இந்தியாவில் அதிக நிலப்பரப்பில் அமைந்துள்ள மருத்துவமனைகளுள் நம் நெல்லை மருத்துவமனையும் ஒன்று.

வரவிருக்கும் வசதிகள்:

நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் அமைந்து வரும் இந்த சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன மருத்துவத் துறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

1.ஏழு மாடியில் மூன்று பகுதிக் கட்டிடங்களுடன் இந்த மருத்துவமனை பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

2. 7 அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள் உட்பட 330 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை அமைகிறது.

3.பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளடங்கிய 450 மருத்துவ பணியாளர்கள் சேவை செய்ய உள்ளனர்.

4.சிறிதும் பெரிதுமாக 13 துறைகளில் அதிநவீன சிகிச்சை பெறும் வசதிகள் இடம்பெறுகிறது.

5. இதன் மூலம் பல நோய்களுக்கு நாம் சென்னை,மதுரைக்கு செல்லும் நிலை தவிர்க்கப்படும்.

விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த மருத்துவமனையால் நம் நெல்லை தென் தமிழகத்தின் மருத்துவ தலைநகரமாக மாறும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனையும் விரைவில் வரவுள்ளதால் தென்தமிழகத்தின் மருத்துவ நகரங்களாக மதுரையும் நெல்லையும் உருவெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.!

Comments

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...